‘பிரேமம்’ படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகை சாய்பல்லவி, சமீபத்தில் வெளியான ‘தியா’ என்ற படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றி அடையவில்லை என்றாலும் சாய்பல்லவியின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் சாய்பல்லவி தற்போது சூர்யாவின் ‘என்.ஜி.கே’ மற்றும் மாரி 2′ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வரும் நிலையில் தற்போது இன்னுமொரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இயக்குனர் வேணு இயக்கவுள்ள அடுத்த படமான ஆக்சன் படத்தில் சாய்பல்லவி நடிக்கவிருப்பதாகவும், இந்த படம் நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்றும், இந்த படம் சாய்பல்லவியின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என்றும் கூறப்படுகிறது