தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தலில் மக்களின் முடிவை பணிவுடன் ஏற்பதாகவும். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் அங்கங்கள் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெலங்கானாவில் அபார வெற்றி பெற்றுள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் . மிசோரமில் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்துள்ள மிிசோ தேசிய முன்னணிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்் பிரதமர் மோடி