வாக்காளர்கள் நீக்கம்: திமுக.,வின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு!

election voting - 2026

வாக்காளர்கள் நீக்கம்.திமுகவின் திட்டமிட்ட விஞ்ஞான முறைகேடு. கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று, பாஜக.,வைச் சேர்ந்த ஜி.கே. நாகராஜ் குறிப்பிட்டுள்ளர். அவர் இது குறித்து குறிப்பிட்டதாவது…

கோவையில் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோவையிலுள்ள 2048 பூத்களிலும் மாற்றத்தை விரும்பக் கூடிய பாஜக.,விற்கு வாக்களிக்கக் கூடியவர்கள் நீக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி 12 மணியளவில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்களிக்க முடியாமல் திகைத்து நின்றபோதே தெரிந்தது. இவர்கள் அனைவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வாக்களித்து வருபவர்கள். சொந்த வீட்டில் வசித்து வருபவர்கள். உள்ளூர் திமுக., அதிமுக., நிர்வாகிகளுக்கு நன்கு அறிந்தவர்கள்.

இந்த இரு கட்சிகளுக்குமே வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது தெரிந்திருந்துமே அவர்களை உசார்படுத்தாமல் மௌனம் காத்து கூட்டுசதி செய்துள்ளார்கள். ஏனென்றால் இவர்கள் வாக்குகள் இக்கட்சிகளுக்கு விழாது. இது திமுகவின் விஞ்ஞான முறைகேடு.

அதில் உச்ச கட்டமே கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி எண் 214-ல் அங்கப்பா பள்ளியில் 823 ஓட்டுக்கள் நீக்கப் பட்டிருப்பதுதான். அதில் பெரும்பாலானவர்கள் நல்லாட்சியை விரும்பி வாக்களிக்கக் கூடிய ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல் தெப்பக்குளத்தில் வாக்குச்சாவடி எண் 158-ல் 40 ஓட்டுக்களும், 157-ல் 45 ஓட்டுக்களும், 156-ல் 20 ஓட்டுக்களும், 155-ல் 40 ஓட்டுக்களும், 154 –ல் 30 ஓட்டுக்களும், 153-ல் 25 ஓட்டுக்களும் என 200 ஓட்டுக்கள் நீக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வடஇந்தியர்கள். பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடியவர்கள். இது கோவையில் மட்டும். இதுபோன்று 5% ஓட்டுக்கள். அதாவது 20 இலட்சம் ஓட்டுக்களில் ஏறக்குறைய 1 இலட்சம் ஓட்டுக்கள் deleted என நீக்கப்பட்டுள்ளது.

மௌனம் காத்த மாவட்ட ஆட்சியர்:- இரண்டு மணியளவில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் சென்று, அவர் இல்லாததால் தொலைபேசி மூலம் புகார் கூறியும், அங்கப்ப பள்ளியில் வாக்காளர்களோடு போராட்டம் நடத்தியும், சேலஞ்ச் ஓட்டு கேட்டும் மாவட்ட ஆட்சியரிடமிருந்து கிடைத்த பதில், சட்டத்தில் இடமில்லை என்பதே.

1353 வாக்குகள் இருந்த அங்கப்பா மேல் நிலைப்பள்ளியில் 823 ஓட்டுக்கள் குறைந்தபோது விழித்திருக்க வேண்டிய மாவட்ட நிர்வாகம் மௌனம் காத்து திமுக.,வின் விஞ்ஞான முறைகேட்டிற்கு துணை போயிருக்கிறது.

30 ஆண்டு காலமாக வாக்களித்த மக்கள் தங்கள் வாக்கு நீக்கப்படுமென கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். மாவட்ட ஆட்சியர் உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர்கள் பட்டியல் திருத்தப்பட்டது என்பதும், ஆனால் வாக்குச்சாவடி எண் 214-ல் வாக்குகள் மறுக்கப்பட்டு நின்றிருந்த மக்கள் எங்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. நாங்கள் 30 ஆண்டுகளாக குடியிருக்கிறோம் என்று கூறியபோது, அங்கு வந்திருந்த ARO திரு.கோவிந்தன் மௌனம் காத்தார். மாவட்ட ஆட்சியர் பதில் சொல்லாமல் இன்னும் மௌனம் காக்கிறார்.

இது சம்பந்தமாக மனுகொடுக்க முற்பட்ட பொழுது, அங்கு காத்திருந்த வழக்குரைஞர்களை நீண்டநேரம் காக்க வைத்து தேர்தல் முடிந்தபின்பு புகார் மனுவை பெற்றுக் கொண்டதே திமுக.,வின் முறைகேட்டிற்கு மாவட்ட நிர்வாகம்(RO) துணை போகிறது என்பதற்கு சாட்சி.

கள்ள ஓட்டு போட்டு அன்று ஆட்சியைப் பிடித்த திமுக., இன்று நல்ல ஓட்டுக்களை நீக்கி, முறைகேடு செய்து தமிழகம் முழுவதும் ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளியிருக்கிறது. ஆனால் பாஜக., இதை இத்துடன் விடாது. ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டத்தை முன்னெடுக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

Entertainment News

Popular Categories