இந்தியாவில் கத்தோலிக மிஷநரிகளின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ10,000 கோடிக்கு இருக்கும் என ஒரு தகவல். பெரும்பாலும் இந்திய நகரங்களின் மையப்பகுதியை சர்ச் வளைத்துப் போட்டிருக்கும்.
திருட்டுக் கிரித்தவம் இடங்களை வளைத்துப் போட்டது; அப்பாவி மக்களை வளைத்துப் போட்டது; இந்து வழிபாட்டு முறைகளை வளைத்துப் போட்டது; மூலநூல் வரிகளை வளைத்துப்போடும் முயற்சியிலும்…….
ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் ஆபிரஹாமியக் கருத்துகள் எதுவும் கிடையவே கிடையாது; பரம்பொருளின் உருவமற்ற தன்மை கூறும் தொன்மையான கோட்பாட்டைப் பின்னால் ஆபிரஹாமியம் உருவி எடுத்துக்கொண்டது.
மறைகள் கூறும் பல்பிறவிக் கொள்கை ஆபிரஹாமியத்துக்கு முற்றிலும் முரணானது.
மறைகள் மாந்தரைப் படைப்பின் அங்கமாகவே கூறுகின்றன; ஆபிரஹாமியக் கருத்தோட்டம் முற்றிலும் முரணானது.
ஆபிரஹாமியக் கடவுள் செய்வதுபோல் ப்ருஹதாரண்யகம் சொல்லும் ப்ரம்மத்துக்கு அவிசுவாசி ஒவ்வொருத்தனாகப் பிடித்து நரக நெருப்பில் தள்ளி இன்புறும் வேலை கிடையாது.
இருக்கும் இல்லத்தை, சொந்த பந்தங்களைத் துறந்து வெளியேறிய ஒரு முனிபுங்கவரைச் சொல்கிறது ப்ருஹதாரண்யகம்; போகும் இடங்களிலெல்லாம் தசம பாகம் தண்டல் செய்து, சுருட்டும் அநியாயக்காரர்களுக்கு இந்த நூலில் என்ன வேலை?