பாகிஸ்தான் அடுத்து இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டால், போர் என்று வந்துவிட்டால், அது தாக்கப் போகும் இலக்கு கன்னியாகுமரிதான் என்று கூறுகிறது பாகிஸ்தானிய டிவி.
பாகிஸ்தான் நாட்டின் ராணுவ வலிமை, அணுகுண்டு வீச்சு, அணு ஆயுத பிரயோகம் என சிலவற்றை பாகிஸ்தான் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் கூறப்படும் விவரம் இவை. பாகிஸ்தானின் திட்டத்தை விவரிக்கும் இந்தத் தொகுப்பில், பாகிஸ்தான் தமிழகத்தைத் தாக்குவோம் என்கிறது.
இந்தத் திட்டத்தில் முதல் இலக்காக, கன்னியாகுமரி இருக்கும் என்றும் கன்னியாகுமரியில் இருந்து வடக்கே தில்லி வரை நிலப்பரப்பை விவரித்து செய்தித் தொகுப்பை வெளியிட்டுள்ளது பாகிஸ்தான் டிவி.
எனவே பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் தொடுத்தால், வடநாட்டுக்காரர்கள் தான் அடிபடுவார்கள், நாம் வடசுடலாம் என்று தமிழகத்துப் போராளிகள் தப்புக் கணக்குப் போட்டால், முதல் இலக்கு நெல்லை மேலப்பாளையத்தில் இருந்து ராமநாதபுரம் கீழக்கரையில் இருந்து இங்கே வாழும் முஸ்லிம் பகுதிகளும் சேர்ந்துதான் அழிந்து போகும் என்றும், மேலிருந்து விழும் குண்டுக்கு இது முஸ்லிம் இது இந்து என்று தெரியாது என்றும், ஒட்டுமொத்தமாக இந்தியர்களைத்தான் அழிக்கும் என்றும் கருத்திடுகிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
ஏற்கெனவே உலக அளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகி வருபவர்களும் இஸ்லாமியர்களே! அந்த குண்டுகளுக்கு மதம் கிடையாது. ஆனால் குண்டுகளை வைத்திருப்பவனிடம் மத ரீதியாக அப்பாவி இஸ்லாமியர்கள் நெருக்கம் காட்டினால், அந்த நெருக்கமே அவர்களைக் கொன்று விடும் என்று எச்சரிக்கின்றார்கள்!
[videopress OhMGqG8n]
Please read my book on Hindu society entropy and chaos Himalya publishing house Mumbai Rs 1540/