ஊடகங்களை திமுக., வளைத்துப் போட்டு பிரசாரம் செய்து வரும் போது, சமூக ஊடகங்களில் பலர் திமுக.,வை வளைத்துப் பிடித்து கலாய்த்து வருகிறார்கள்!
சமூக ஊடகங்களுக்கு பயந்துதான், கருணாநிதியே வெகுகாலம் அவற்றில் கணக்கு தொடங்காமல் இருந்தார். ஊடகங்களில் பத்திரிகையாளர் சந்திப்புகளில் கேள்வி கேட்கும் பத்திரிகையாளரை நீ யார் எந்த ஊடகம் என்று கேட்டு அடையாளப் படுத்தியதில் கருணாநிதியே முதலாமவர்.!
முடிந்தால் அவர்களுக்கு பார்ப்பனப் பட்டம் சூட்டி, பூணூல் அணிவிக்கும் சடங்கைச் செய்த புரோஹிதராகவும், இல்லாவிட்டால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பும் ரௌடியாகவும் திகழ்ந்தவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் சமூக ஊடகங்களின் எழுச்சி இப்போது அவர்களை அச்சத்தில் உறைய வைத்திருக்கிறது.
இன்று ஒவ்வொரு நாளும் திமுக.,வையும் அதன் தலைமையையும் கிண்டலும் கேலியும் செய்து மீம்ஸ்களும் வீடியோக்களும் வெளி வருகின்றன. இவற்றுக்காக எவரும் கூலிக்கு வேலை பார்ப்பதில்லை! தங்கள் கருத்தோட்டத்தை தாங்களாகவே பதிய வைக்கின்றனர்.
இன்று துண்டுச்சீட்டுத் தலைவரின் புகழ்பாடும் ஒரு வீடியோ…