விருதுநகரில் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவு திரட்டி வாகன பேரணி!

Published:

two wheeler rally virudhunagar radhika - 2026
#image_title

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு ஆதரவாக அருப்புக்கோட்டையில் இருசக்கர வாகன பேரணி; பேரணியை ராதிகா சரத்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்

பாவடி தோப்பு பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணி துவக்கத்தின் போது அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனும் வேட்பாளர் மாணிக்கம் எதிரே வந்ததால் அமைச்சரை நேருக்கு நேர் சந்தித்து ராதிகா சரத்குமார் நலம் விசாரித்தார்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆதரவாக அருப்புக்கோட்டையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பாவடி தோப்பு பகுதியில் இருந்து துவங்கிய இந்த பேரணியை ராதிகா சரத்குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.‌

இந்தப் பேரணி துவக்கத்தின் போது அருப்புக்கோட்டையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரனும் வேட்பாளர் மாணிக்கம் விருதுநகர் செல்வதற்காக அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர்
அப்போது அங்கு ராதிகா சரத்குமாரும் எதிரே வந்ததால் இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.

அப்போது அமைச்சரும் ராதிகா சரத்குமாரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி நலம் விசாரித்தனர். இந்த இருசக்கர வாகன பேரணி புளியம்பட்டி, காந்தி மைதானம், சிவன் கோவில் சந்திப்பு, பஜார், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக காந்தி நகர் வரை சென்று நிறைவுற உள்ளது.‌

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பந்தல்குடி சென்று ராதிகா சரத்குமார் விருதுநகர் செல்ல உள்ளார். பிற்பகல் வேளையில் விருதுநகரில் இதேபோன்று இருசக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img