spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்திருநங்கையிடம் பணம், நகையை பறித்த எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்....!

திருநங்கையிடம் பணம், நகையை பறித்த எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்….!

 

bbb 1
நெல்லையில் போலீசார் ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து நகை, பணம் ஏமாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ரோஸ் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் திருநங்கைகளுக்காக பல சேவைகளை செய்து வருபவர் திருநங்கை பபிதா ரோஸ். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து பிரபலமாகி வருபவா்.

இவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ராமச்சந்திராப் பட்டிணத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினார்.

இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது வீட்டில் கல் வீசி தாக்குல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக பபிதா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அம்பாசமுத்திரம் காவல் நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன், இந்த வழக்கை விசாரிக்கும் முகமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்தித்து வந்திருக்கிறார்.

இதன் மூலம இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் வரை சென்றுள்ளது.

ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவரும் நிலையில், திருநங்கை பபிதா ரோஸை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளார் சண்முகநாதன்.

இரண்டு ஆண்டுகள் ரகசியமாக இருந்த இவர்களுடைய உறவு சில மாதங்களுக்கு முன் சண்முகநாதன் வீட்டுக்குத் தெரிய வந்து,

குடும்பத்தார் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் திருநங்கை பபிதாவுடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துள்ளார் சண்முகநாதன்.

இதனால் பபிதா ரோஸ் நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுலவகத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். அதில், விஜய சண்முகநாதன் மனைவி, குழந்தைகள் இருப்பதை மறந்து திருநங்கையான என்னை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார்.

என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது என்னை புறக்கணிக்கிறார். அவரிடம் நிறைய நகை மற்றும் பணத்தை இழந்துள்ளேன்.

அவரையும் அவர் பறித்துச் சென்ற தன் உடைமைகள் அனைத்தையும் மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து தாழையூத்து டி.எஸ்.பி. பொன்னரசு இதைப் பற்றி விசாரணை செய்து வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe