வீரன் வாஞ்சிநாதன் 113வது நினைவு நாள்: சமூக ஆர்வலர்கள் சிரத்தாஞ்சலி!

vanchinathan statue garlanding in sengottai - 2026

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் பஸ் நிலையத்துக்கு அருகே அமைந்துள்ள வீரன் வாஞ்சிநாதன் சிலைக்கு அவரது 113வது நினைவு தினத்தை முன்னிட்டு, தேசிய சிந்தனைப் பேரவை (தென்காசி) சார்பில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது

செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மணிமண்டபத்தில் 113-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து பஸ் நிலையம் அருகே உள்ள வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அவரது சிலைக்கு வாஞ்சிநாதனின் தம்பி மகன் ஹரிஹரசுப்பிரமணியன், அவரது மகன் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இதில் தியாகிகள் வாரிசுகள் ஓட்டபிடாரம் மாடசாமி வாரிசு உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, நகராட்சி மேலாளர் கண்ணன் மற்றும் நகராட்சி சுகாதார மேற்பார்வை யாளர்கள், பணியாளர்கள், கோதையம்மாள் தியாகி வாரிசு கைலாசநாதன், சாவடி சொக்கலிங்கம்பிள்ளை வாரிசு செண்பக குற்றாலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. சார்பில் நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் ராமலெட்சுமி, தலைமை நிலைய பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் அவர் என் கணேசன், மாவட்ட பிரிவு நிர்வாகிகள் ஞானராஜ், ஜாகீர் உசேன், கவுன்சிலர்கள் முத்துபாண்டி, ஜெகன் உள்பட பலர் கலந்த கொண்ட னர். 

பா.ஜனதா சார்பில் நகர தலைவர் வேம்புராஜ் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ராமர் தலைமையில் மரியாதை செலுத்தப் பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் நகர தலைவர் ஜோதிலிங்கம், ஆதிமூலம், ராஜீவ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மகளிரணியினர் உள்பட பலர் ஊர்வலமாக வந்து, வாஞ்சி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதேபோல் தேசிய சிந்தனை பேரவை, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வாஞ்சிநாதன் சிலைக்கு மாலை அணிவித்து சிரத்தாஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நாள் முழுதும் வாஞ்சி சிலைக்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சார்பில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஆளுநரின் அஞ்சலி

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி வாஞ்சிநாதனின் தியாகம் குறித்து தமது சமூகத் தளப் பதிவில் குறிப்பிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார். அவரது பதிவில், மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் திரு வாஞ்சிநாதனை அவர் உயிர் நீத்த நாளில் தேசம் ஆழ்ந்த நன்றியுடனும் பெருமையுடனும் நினைவுகூர்கிறது. சொந்த ஊர் மக்களுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சொல்லொணா அட்டூழியங்களை தன்னால் தாங்க முடியாதபோது, ​​வாஞ்சிநாதன் காலனித்துவ சக்திக்கு சவால் விடுத்து, திருநெல்வேலியின் அடக்குமுறை மாவட்ட ஆட்சியர் ராபர்ட் ஆஷை படுகொலை செய்தார். எதிரி படைகளால் சூழப்பட்டபோது, ​​ஆங்கிலேயர்கள் தன்னை பிடித்து காவலில் எடுத்து விடாதபடி தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தனியாத துணிச்சல், தேச சுதந்திரம் மீதான காதல் மற்றும் நாட்டுக்கான அவரது உச்சபட்ச தியாகம் ஆகியவை ஏராளமான இளைஞர்களை சுதந்திரத்துக்கான போராட்டத்தில் சேரத் தூண்டி, இறுதியில் நமது சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது – என்று குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories