திருநங்கையிடம் பணம், நகையை பறித்த எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்….!

 

bbb 1 - 2026
நெல்லையில் போலீசார் ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து நகை, பணம் ஏமாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ரோஸ் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் திருநங்கைகளுக்காக பல சேவைகளை செய்து வருபவர் திருநங்கை பபிதா ரோஸ். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து பிரபலமாகி வருபவா்.

இவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ராமச்சந்திராப் பட்டிணத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினார்.

இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது வீட்டில் கல் வீசி தாக்குல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக பபிதா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அம்பாசமுத்திரம் காவல் நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன், இந்த வழக்கை விசாரிக்கும் முகமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்தித்து வந்திருக்கிறார்.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இதன் மூலம இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் வரை சென்றுள்ளது.

ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவரும் நிலையில், திருநங்கை பபிதா ரோஸை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளார் சண்முகநாதன்.

இரண்டு ஆண்டுகள் ரகசியமாக இருந்த இவர்களுடைய உறவு சில மாதங்களுக்கு முன் சண்முகநாதன் வீட்டுக்குத் தெரிய வந்து,

குடும்பத்தார் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் திருநங்கை பபிதாவுடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துள்ளார் சண்முகநாதன்.

இதனால் பபிதா ரோஸ் நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுலவகத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். அதில், விஜய சண்முகநாதன் மனைவி, குழந்தைகள் இருப்பதை மறந்து திருநங்கையான என்னை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார்.

என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது என்னை புறக்கணிக்கிறார். அவரிடம் நிறைய நகை மற்றும் பணத்தை இழந்துள்ளேன்.

அவரையும் அவர் பறித்துச் சென்ற தன் உடைமைகள் அனைத்தையும் மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து தாழையூத்து டி.எஸ்.பி. பொன்னரசு இதைப் பற்றி விசாரணை செய்து வருகின்றார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories