திருநங்கையிடம் பணம், நகையை பறித்த எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்….!

 

bbb 1 - 2026
நெல்லையில் போலீசார் ஒருவர் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தெரியாமல் திருநங்கையை மணந்து நகை, பணம் ஏமாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ரோஸ் டிரஸ்ட் என்ற அமைப்பின் மூலம் திருநங்கைகளுக்காக பல சேவைகளை செய்து வருபவர் திருநங்கை பபிதா ரோஸ். இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து பிரபலமாகி வருபவா்.

இவர் நெல்லை மாவட்டம் தென்காசி அருகே ராமச்சந்திராப் பட்டிணத்தில் குடும்பத்துடன் வசித்துவருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதும், காசு தர மறுக்கும் இடங்களில் அராஜகம் செய்வதும் கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பேசினார்.

இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரது வீட்டில் கல் வீசி தாக்குல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக பபிதா போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து அம்பாசமுத்திரம் காவல் நிலைய எஸ்.ஐ. விஜய சண்முகநாதன், இந்த வழக்கை விசாரிக்கும் முகமாக அடிக்கடி பபிதா ரோஸை சந்தித்து வந்திருக்கிறார்.

இதன் மூலம இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, திருமணம் வரை சென்றுள்ளது.

ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவரும் நிலையில், திருநங்கை பபிதா ரோஸை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளார் சண்முகநாதன்.

இரண்டு ஆண்டுகள் ரகசியமாக இருந்த இவர்களுடைய உறவு சில மாதங்களுக்கு முன் சண்முகநாதன் வீட்டுக்குத் தெரிய வந்து,

குடும்பத்தார் அவரைக் கண்டித்துள்ளனர். இதனால் திருநங்கை பபிதாவுடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துள்ளார் சண்முகநாதன்.

இதனால் பபிதா ரோஸ் நெல்லை மாவட்ட எஸ்.பி. அலுலவகத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். அதில், விஜய சண்முகநாதன் மனைவி, குழந்தைகள் இருப்பதை மறந்து திருநங்கையான என்னை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார்.

என்னுடன் சேர்ந்து குடும்பம் நடத்திவிட்டு இப்பொழுது என்னை புறக்கணிக்கிறார். அவரிடம் நிறைய நகை மற்றும் பணத்தை இழந்துள்ளேன்.

அவரையும் அவர் பறித்துச் சென்ற தன் உடைமைகள் அனைத்தையும் மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து தாழையூத்து டி.எஸ்.பி. பொன்னரசு இதைப் பற்றி விசாரணை செய்து வருகின்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories