தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அந்த கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி எனும் தொண்டர் பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளார்.
தேமுதிக தொண்டர் மாலிக் அன்சாரி அவரது முகனூல் பக்கத்தின் பதிவில் கூறியுள்ளதாவது :- தலைவர் #கேப்டன் அவர்களுக்கு வணக்கம்.
கழத்தின் மீதும் உங்கள் மீதும் மாறாத பாசம் கொண்ட கடைக்கோடி தொண்டனின் கடிதம்.
மக்கள் எதிர்ப்பார்த் தூய்மயான கூட்டணியை அமைத்தீர்கள், இந்த கூட்டணி மீது மக்களின் பார்வையும் பட்டது என்பது தான் உண்மை…
பாராளுமன்ற தேர்தலிலும் இந்தியாவே எதிர்ப்பார்த்த கூட்டணியை தான் அமைத்தீர்கள், அந்த கூட்டணி மீதும் மக்களின் நம்பிக்கையை பெற்றது…
ஆனால் இரண்டிலும் நாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளோம்…
காரணம் என்ன? என்பதை சிந்திக்கவேண்டிய தருணம் இது…
கூட்டணியை காலம் தாழ்த்தி அறிவிப்பது தான், அதை ஊடகங்கள் உங்கள் மீது சேற்ற வாரி வீச அவகாசமாக அமைந்துவிடுகிறது…
தேர்தல் சிறப்பு மாநாட்டில் கூட்டணியை நீங்கள் அறிவித்திருந்தால் வெற்றி அடைந்திருப்போமோ என்று எண்ண தோன்றுகிறது…
மேலும் நீங்கள் முதல்வர் வேட்பாளர், உங்களின் ஒவ்வொரு அசைவையும் மக்கள் கண்ணாணிக்கிறார்கள், என்ன தான் பிரமாதமான தேர்தல் அறிக்கை என்றாலும் அதை நீங்கள் உங்கள் வாயால் சொன்னால் தான் மக்களை வசீகரிக்கும்…
எனவே நான் ஆட்சிக்கு வந்தால், என்ன என்ன திட்டங்கள் செய்வேன், அதனால் யார் பயன் அடைவார்கள், எவ்வளவு பேர் பயன் அடைவார்கள் என்பதை தெள்ள தெளிவாக அரை மணி நேரமாவது விளக்க நீங்கள் பயிற்சி மேற்கொள்வது காலத்தின் கட்டாயம்.
மக்களின் வரிபணத்தில் செய்ததை எல்லாம் ஆண்டவர்கள், ஆளுபவர்கள் மேடையில் பேசும் போது, உங்கள் பணத்தில் நீங்கள் இதுவரை செய்ததை ஏன் கூற மறுக்கிறீர்கள்? முடிந்தவரை மேடையில் பட்டியல் இடுங்கள், அது உங்கள் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்…
இப்படிப்பட்ட பெரிய மாற்றத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் தலைவா…
உங்கள் மீது மாறாத பற்றுடன் உண்மைத்தொண்டன்
Malik Ansari.
என்று விஜயகாந்த்திற்கு மாலிக் அன்சாரி ஆலோசனைகளை கூறி அவரது முகனூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .
என௠கரà¯à®¤à¯à®¤à¯ˆ கேபà¯à®Ÿà®©à¯ அவரà¯à®•à®³à®¿à®©à¯ பாரà¯à®µà¯ˆà®•à¯à®•à¯ எடà¯à®¤à¯à®¤à¯à®šà¯à®šà¯†à®©à¯à®± தினசரிகà¯à®•à¯ நெஞà¯à®šà®¾à®°à¯à®¨à¯à®¤. நனà¯à®±à®¿.