கேரள மாநிலத்தில் அடிக்கடி நடைபெற்று வரும் அராஜகங்களின் ஒரு பகுதியாக, இன்று ஹிந்து பெண் கான்ஸ்டபிள் சௌம்யா, முஸ்லிம் காவல் துறை அதிகாரியால், கொடூரமாக வாளால் வெட்டப் பட்டும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப் பட்டும் கொல்லப் பட்டுள்ளார்.
கேரள மாநில காவல் துறை அதிகாரியான அஜாஸ் என்ற முஸ்லிம், மூன்று குழந்தைகளுக்கு தாயான சௌம்யா என்ற ஹிந்து பெண் கான்ஸ்டபிளை கொடூரமாக கொலை செய்திருக்கிறார்.
கேரள மாநிலம் ஆலப்புழ மாவேலிக்கரயில், வல்லிக்குன்னம் பகுதியைச் சேர்ந்த சௌம்யா என்ற பெண் காவல்துறை கான்ஸ்டபிள் தனது ஸ்கூட்டரில் காவல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த அஜாஸ் என்ற காவல் அதிகாரி ஸ்கூட்டர் மீது இடித்து தள்ளியுள்ளார்.
கீழே விழுந்த சௌம்யா, அங்கிருந்து ஓடித் தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், காரில் இருந்து இறங்கிய அஜாஸ், வாளால் அவரை வெட்டி, பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீவைத்துள்ளார். இதில் சௌம்யா அங்கேயே உயிரிழந்துள்ளார்.
சௌம்யா புஷ்பாகரன், மூன்று குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. பின்னரே முழு விவரம் தெரியவரும் என்று கூறப் படுகிறது.
தகவல்: ஜன்மபூமி
#Shocking Ajas, a Muslim police officer in #Kerala brutally murdered a female constable Soumya, mother of three children. He hacked her with sword and set ablaze in full public view after knocking her down with his car