பொங்கல் திருநாளை புகையில்லா பொங்கலாக கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என பள்ளிகல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள், குப்பைகள், டயர்கள் ஆகியவற்றை எரிக்கக் கூடாது எனவும், புகையில்லாத பொங்கலை கொண்டாடுவது குறித்து மாணவர்களிடம் அனைத்து பள்ளிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.