தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும் வரும் கல்வியாண்டில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு….
வரும், 2019-20 ம் கல்வியாண்டிற்கு, தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகம் ஆகிறது.
புதிய பள்ளிச் சீருடைகள், மாணவ, மாணவியரின் மனதை கவரும் வகையில் இருக்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.