விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை ஜார்க்கண்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘பிரதமர் கிஷான் மந்தன் யோஜனா’ திட்டம். இந்தத் திட்டத்தின் மூலம், தற்போது 18 முதல் 40 வயது வரை உடைய விவசாயிகள் 60 வயதை எட்டிய பிறகு அவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைக்கிறார்.
இதனையொட்டி தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் ஜார்க்கண்ட் ஆளுநர் திரௌபதி மர்மு, முதலமைச்சர் ரகுபர் தாஸ், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மற்றும் பலர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையையும் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மாநில தலைமைச் செயலக கட்டட கட்டுமானப்பணிக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
முன்னதாக, ஜார்கண்ட் முதல்வர் ரகுபார் தாஸ், பிரதான் மந்திரி கிசான் மந்தன் திட்டம் “விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பு” அறிமுகப் படுத்தப் படுகிறது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ஒரு நாள் ராஞ்சி பயணத்தின் போது ‘பிரதான் மந்திரி லகு வியாபரிக் மந்தன் யோஜனா’ மற்றும் ‘ஸ்வரோஜ்கர்’ ஓய்வூதிய திட்டங்களையும் தொடங்கவுள்ளார். நாடு முழுவதும் உள்ள 462 ஏக்லவ்யா மாதிரி பள்ளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைனில் அடிக்கல் நாட்டுவார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர கடந்த ஆண்டு செப்டம்பரில் ராஞ்சியில் இருந்து ‘ஆயுஷ்மான் பாரத்’ சுகாதார திட்டத்தை தொடங்கினார்.
பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா 60 வயதை எட்டியவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ .3,000 ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் 5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளின் உயிரைப் பாதுகாக்கும். இந்த திட்டத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ரூ .10,774 கோடி செலவிடப்பட்டுள்ளது. தற்போது 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும் நன்மைகளைப் பெற தகுதியுடையவர்கள்.