spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைகோவில் நிலத்திற்கு பட்டா கேட்கும் வைகோ

கோவில் நிலத்திற்கு பட்டா கேட்கும் வைகோ

- Advertisement -
vaiko
vaiko

கோவில் நிலத்திற்கு பட்டா கேட்கும் வைகோ

*பாளையங்கோட்டை இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிக்கும் திம்மராஜபுரம் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் சொத்துகளுக்கு
பட்டா உரிமை வழங்ககோரி தமிழக முதல்வர்க்கு கடிதம் எழுதியுள்ளார் வைகோ.

இதை வன்மையாக கண்டிக்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத் திருநெல்வேலி

யார் சொத்து ?
யாருக்கு கொடுப்பது?

சில கோவில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர் அவற்றை மீட்டு சர்வே செய்ய வேண்டும் என்று ஏற்கனவே
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டிருந்தது

*இந்த நிலையில் அதே திருக்கோவில் சொத்துக்களை உரிமை கோருகிறது திமுக மற்றும் வைகோ.

இதே வைகோ அவர்கள் மாற்றுமதததினர் நிர்வகிக்க கூடிய
வக்பு வாரியம் & கிறிஸ்துவ மிஷினேரிகள் பாத்தியபட்ட நிலங்களை மக்களுக்கு கொடுப்பார்களா ?
அதை கேட்கதான் துணிவு இருக்கிறதா ??

இந்து அறநிலைதுறை நிர்வகிக்கக்கூடிய கோவில் சொத்துக்களை பட்டா ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது என்றும் அப்படி பட்டா பெற்றிருப்பர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

IMG-20201011-WA0007

இந்து திருக்கோவில்களின் நலனுக்காக இதுவரை ஏதாவது முயற்சி செய்துள்ளாரா வைகோ அவர்கள் என்றால் அதுதான் இல்லை !
அது என்னவென்று பார்ப்போம்
1) தென்காசி மாவட்டம்
குருவிகுளம் அருகே உள்ள கலிங்கப்பட்டி ஊராட்சி என்ற வைகோவின் சொந்த ஊரில் உள்ள கீழ *மரத்தோணி அருள்மிகு தோனிஸ்வரர் திருக்கோவில் மற்றும் *மேலமரத்தோணி சுந்தரேசபெருமாள் திருக்கோவில்* ஆகிய இரு கோவில்கள் சார்ந்த 40 ஏக்கர் க்கும் மேற்பட்ட நிலங்களை பல வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றனர் வைகோவின் சொந்த தம்பி ரவி என்பவர்,
இப்பொழுது அந்த 40 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் எந்த சூழ்நிலையில் உள்ளது என்பது தெரியவில்லை அந்த நிலங்களையும் இந்து அறநிலைத்துறை சர்வே செய்து கண்காணிக்க வேண்டும் அப்படி பட்டா ஏதும் வழங்கப்பட்டு இருப்பின் அதை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் மேற்கண்ட இரு கோவில்களிலும் சில திருப்பணிகள் நடைபெற்றால் அதை தடுத்தும் வருகின்றனர் அறங்காவலர் குழு. இதன் பின்னணியில் கிறிஸ்துவ மிஷனரிகளின் சூழ்ச்சி உள்ளது என்பது அப்பகுதி மக்களின் கருத்து.

IMG-20201011-WA0005
IMG 20201011 WA0005
IMG-20201011-WA0006
IMG 20201011 WA0006

2) சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநயினார் திருக்கோவில் பாத்தியப்பட்ட நிலங்களில் வை.கோ தந்தையார் வையாபுரி பெயரில் உள்ள பள்ளி
வாடகை பாக்கி 15 லட்சத்து 84ஆயிரத்து 720

வாடகை செலுத்தாதோர் பட்டியலில் முதலிடம்

ஊருக்கெல்லாம் உபதேசம் வியாக்யானம் பேசும் வைகோ அவர்கள் வாடகையும் செலுத்தவலியுறுத்த வேண்டும்.

மேற்கண்ட இரு விஷயங்களையும் பார்க்கும் போது வைகோ அவர்கள் இந்து கோவில்களுக்கு எந்த நன்மைகளும் செய்தது கிடையாது என் உறுதிபடுகிறது.

இவர் தான் கோவில் நிலத்திற்கு பட்டா கேட்கிறார் !

நினைவிருக்கட்டும் கோவில் சொத்து
குல நாசம்

கோவில்களை பாதுகாப்போம்

  • ஆறுமுககனி

விஸ்வ ஹிந்து பரிசத் திருநெல்வேலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe