சம்ஸ்க்ருத நியாயமும் விளக்கமும் (8): டிட்டிப நியாய..!   

samskrita nyaya - 2026

தெலுங்கில்- பி.எஸ் சர்மா 
தமிழில்- ராஜி ரகுநாதன்   

‘டிட்டிப: நியாய:’ –

டிட்டிப –ஆள்காட்டிப் பறவை

ஒரு கடற்கரையில் கூடு கட்டிக் கொண்டு ஒரு ஆட்காட்டிப் பறவை ஜோடி வசித்து அந்தது. கடலில் எழும் அலைகளில் அதன் கூடும் அதில் இருந்த முட்டைகளும் அடித்துச் செல்லப்பட்டன. கடல் அவ்வாறு செய்வது அது முதல்தடவை அல்ல. பறவை ஜோடி மிகவும் வருந்தியது. “டிட்டி டாவ்” என்று சப்தமிட்டு அழுதன. இந்த முறை தாய்ப் பறவையால் துயரம் தாங்க முடியவில்லை. “அழுது என்ன பயன்? ஏதாவது செய்ய வேண்டும்” என்று அந்த ஜோடிப் பறவைகள் ஒரு முடிவுக்கு வந்தன.  

கடல் மீது பகை கொண்டன. கடலை மணல் கொண்டு மூடத் தீர்மானித்தன. சிறிது சிறிதாக மணலை மூக்கால் முகர்ந்து வந்து கடலில் போட்டன. அவற்றைப் பார்த்த மேலும் சில பறவைகளும் உதவிக்கு வந்தன. அந்த காட்சியைப் பார்த்த மூவுலக சஞ்சாரி நாரத முனிவர் வியந்து போனார். பக்ஷி ராஜா கருடனிடம் அந்த செய்தியை தெரிவித்தார். அந்த பறவைகளின் தன்னம்பிக்கையை பாராட்டினார்.

திடமான நிச்சயத்தோடு பணி புரிந்த பறவைகளின் மேல் கருடனுக்கு அன்பு பிறந்தது. தானும் ‘டிட்டிப’ பறவைகளுக்கு உதவ முன்வந்தது. தன் முதலாளியான விஷ்ணு பகவானிடம் அனுபதி பெற்று ‘வைனதேயன்’ எனப்படும் கருடன் பூலோகத்திற்கு வந்தது. பறவை அரசன் கூட அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதைப் பார்த்த தேவர்கள் அந்த ‘டிட்டிப’ பறவைகளுக்கு வெற்றி கிடைக்கட்டும் என்று வாழ்த்தினர்.

கருடன் தன் விசாலமான இறக்கைகளால் சமுத்திரத்தை வற்றச் செய்யத் தொடங்கியது. அப்போது என்ன நடந்தது?

சமுத்திர அரசன் கருடனின் தாக்குதலைத் தாங்க முடியாமல் கருடனிடம் பிரார்த்தனை செய்தான். தன் பறவை இனத்தைச் சேர்ந்த ‘டிட்டிப’ பறவைகளுக்கு நேர்ந்த நஷ்டத்தை கருடன் எடுத்துரைத்தது. கடல் அரசன் அந்த பறவைகளின் முட்டைகளைத் திரும்ப ஒப்படைத்தான்.

இந்த கதையினை ஆதாரமாகக் கொண்டே ‘டிட்டிப நியாயம்’ ஏற்பட்டது. தன்னம்பிக்கையும் திட சங்கல்பமும் உள்ளவர்களுக்கு இறைவனின் அருள்  எப்போதும் கிடைக்கும் என்ற செய்தி இந்த நியாயத்தில் உள்ளது. முயற்சியால் காரியத்தை சாதித்துக் கொள்ள முடியும் என்று எடுத்துரைப்பதற்கு பஞ்ச தந்திரத்தில் வரும் இந்த கதையை உதாரணம் காட்டுவார்கள்.

lachit borphukan - 2026

இதே போன்ற தன்னம்பிக்கை, சுய கௌரவம், சாகசம் போன்றவற்றைக் காட்டி வலிமை வாய்ந்த எதிரிகளைக் கூட வென்ற உதாரணங்கள் வரலாற்றில் பல உள்ளன.

‘லாச்சித் போர்புகன்’ வரலாறு ‘டிட்டிப’ நியாயத்திற்கு உதாரணமாக நின்றுள்ளது. இவர் அஸ்ஸாம் இளைஞர்களிடம் ஊக்கத்தையும் சைதன்யத்தையும் நிரப்பிய ஹைந்தவ சிம்மம். காலையில் எழுந்தவுடன் நினைத்துப் போற்றத் தகுந்த ‘லாச்சித் போர்புகன்’ 17ம் நூற்றண்டைச் சேந்தவர்  (1622-1672). தேயிலைத் தோட்டத்தில் கிடைத்த சிசு. அஸ்ஸாம் மொழியில் ல என்றால் ரத்தம். சித் என்றால் நனைந்த என்று பொருள். இவர் சிறந்த வீரனாக வளர்ந்தார். லாசித் சுய கௌரவத்தை உயிரை விட அதிகமாக நேசித்தார். அஸ்ஸாம் பிரதேசத்தை தம் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்த (1671- சராயிகாட் போர்) முகலாய படைகளின் இதயங்களில் அச்சமூட்டிய தீரர் இவர்.

அறிவுக் கூர்மை, மனத்திடம், உடல் வலிமை உள்ளவர்களுக்கு கடவுள் துணை இருப்பார் என்பதைத் தெரிவிக்கும் டிட்டிப நியாயத்தை விளக்கும் இந்த சுலோகம் விக்ரமாதித்ய சரிதத்தில் உள்ளது.

உத்யம: சாஹசம் தைர்யம் புத்தி: சக்தி: பராக்ரம: |
ஷடேதே யத்ர வர்தந்தே தத்ர தேவஸ்ஸஹாயக: ||

பொருள்: கடினமான முயற்சி, சாஹசம், மனோ தைரியம், அறிவுக் கூர்மை, உடல் வலிமை, பராக்கிரமம் என்ற ஆறு குணங்கள் உள்ளவரிடம் கடவுள் அருள் இருக்கும்.

சத்ரபதி சிவாஜி, மிகவும் வலிமை மிக்க ஔரங்கசீபை பந்தாடினான். வெறும் இருநூறு வீரர்கள் கொண்ட படையோடு ஷாயிஸ்தகான் படைத்தளத்திற்குள்  நுழைந்து அவனை உறக்கத்தில் இருந்து எழுப்பி போராடிய பராக்கிரமசாலி வீரசிவாஜி. சண்டையிட இயலாத ஷாயிஸ்தகான் புறமுதுகிட்டு ஓடினான். சுலோகத்தில் கூறிய ஆறு குணங்களும் கொண்ட சிவாஜிக்கு பவானி தேவி வாளைப் பரிசளித்தாள். ஹைந்தவ சாம்ராஜ்யத்தை நிறுவியவனாக சிவாஜியின்  புகழ் வரலாற்றில் நிலைபெறச் செய்தாள்.

சங்கல்ப பலத்தால் வெற்றி பெற்றவர்களை ‘டிட்டிப’ நியாயத்தோடு ஒப்பிடுவர். ‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்பதே இந்த டிட்டிப நியாயம்.

—0o0—

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories