- காச நோய்க்கு…
கறுப்பு வெற்றிலையுடன் இலவங்கத்துண்டு. மவராத வெள்ளை எருக்கம்பூ (மொட்டு) மடித்து மூன்று தினங்கள் சாப்பிடுதல் வேண்டும். உப்பு, புளி, காரமின்றி பத்திய உணவு சாப்பிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை தலைக்கு நொச்சித் தைவம் தேய்த்து தலை முழுகுவது நல்லது.
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, வகைக்கு 200 கிராம் எடுத்து இவற்றுடன் 40 கிராம் மிளகு சேர்த்து மை போல் அரைத்து மாத்திரைகளாக்கி உலர்த்தி, பிறகு தேனில் ஊற வைத்து உணவுக்குப் பிறகு ஒரு மாத்திரையை சப்பி சாப்பிட்டு வர குணம் தெரியும்.
- விளாம்பழ மகத்துவம்
பித்த சம்பந்தமான நோய்களுக்கு விளாம்பழம் மிகவும் நல்லது. விளாம்பழத்தில் சர்க்கரை கலந்து பிசைந்து சாப்பிட்டால் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும். அடிக்கடி ஏப்பம் வருவது குறையும். நல்ல பசி உண்டாகும். சர்க்கரை வியாதிக்கு இந்தப் பழம் மிகவும் நல்லது.
- புகைப்பதை மறக்க…
நாரத்தம் பழத்தோலை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டு. புகைக்கும் எண்ணம் ஏற்படும் பொழுதெல்லாம் ஒவ்வொன்றாக வாயில் போட்டு சுவைத்து வர பிறகு அந்த எண்ணம் மெல்ல மறையும்.
ஆஸ்துமாவுக்கு…
அருகம்புல் கைப்பிடியளவு, மிளகு, வெற்றிலை எடுத்து இடித்து 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து காலை, மாலை சாப்பிட்டு வர குணமாகும்.’
வில்வ இலை 9. மிளகு 6 இரண்டையும் பால் விட்டரைத்து ஒரு டம்ளர் பாலில் போட்டுக் காய்ச்சி காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு இந்தக் கஷாயத்தை வெறும் வயிற்றில் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் குடித்து வர வேண்டும்.
இத்துடன் ஒன்பது துளசி இலைகளை ஒரு டம்ளர் காய்ச்சி ஆறிய நீரில் போட்டு வைத்து பகல் உணவுக்கு முன் இந்த நீரை குடித்து விட்டு பிறகு சாப்பிடவும். இந்த மருந்து சாப்பிடும் போது சைவ உணவே சாப்பிட வேண்டும்.
கரிசலாங்கண்ணி செடிகளை வேரோடு பிடுங்கி சுத்தம் செய்து உரலில் போட்டிடித்து சாறெடுத்து நல்வெண்ணெயுடன் கலந்து தைவம் காய்ச்சி வைத்துக் கொண்டு காலை, மாலை இரவு வேளைகளில் ஒரு ஸ்பூன் அளவு காப்பியில் சாப்பிட்டு வர வேண்டும். சைவ உணவே சாப்பிட்டு வர குணமாகும்.
மிளகாய்ச் செடியின் இலை 10 கி. நொச்சி கொழுந்து இலை 10 கி. வெற்றிலை 10 கி.மிளகு 5 கி எடுத்து மைய அரைத்து சுண்டைக் காயளவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டு காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வர குணமாகும்.
கண்டங்கத்திரிச் செடியை வேருடன் சுத்தப்படுத்தி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து 100 கிராம் பெருங்காயத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து கலந்து வைத்துக் கொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா குணமாகும்.