வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

pmmodi speech in meeting - 2026
#image_title

தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்

வங்காளத்தில் மடங்களின் மீதான தாக்குதல் வரம்பை மீறிய செயல், எச்சரிக்கிறார் மோதிஜி

நண்பர்களே, வங்காளத்திலே, உங்கள் நம்பிக்கைகளின் மீது தாக்குதலைக் கட்டவிழ்க்கும் பாவச்செயலை, டி எம் சி அரசாங்கம் செய்கிறது.   டிஎம்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள், நம் இராமர் ஆலயம் பவித்திரத்தன்மை இல்லாததாம்.  

இராமர் ஆலயம் பவித்திரமானது கிடையாதா?   இராமர் ஆலயம் பவித்திரமானது இல்லையா?   டிஎம்சியின் நோக்கங்கள் தூய்மையானதா சொல்லுங்கள்?   அட டிஎம்சி அரசாங்கமே, ராமநவமி கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்து ஆணை பிறப்பிக்கிறதே!!   

டி எம்சி குண்டர்கள், ராமநவமி ஊர்வலங்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றார்களே!!   இப்போது இங்கிருக்கும் முதலமைச்சரோ, தானே, இந்துத் துறவிகளுக்கு மிரட்டலா விடுக்கிறார்?  

இராமகிருஷ்ணா மிஷன், இஸ்கான், பாரத் சேவா சன்ஸ்தான், இவை நம்முடைய வங்காளத்தினுடைய,  ஆன்மீக அடையாளங்கள்.  

இந்த மாநிலத்தின் முதல்வர், மேடையிலேயே,  இந்த மகத்தான அமைப்புக்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்.   இந்த மிரட்டல் தான், டிஎம்சியின் குண்டர்களுக்கு தைரியத்தை அளித்திருக்கிறது.   

ALSO READ:  ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

என்ன தெரிய வந்திருக்கிறது என்றால், ஜல்பைகுடியிலே, இராமகிருஷ்ண மிஷன் ஆசிரமத்திலே, நேற்று இரவு காலித்தனம் செய்யப்பட்டிருக்கிறது.   ஆசிரமத்திலே பணியாற்றுகின்ற பணியாளர்களை, அடித்துப் போட்டிருக்கிறார்கள்.  

அவர்களுக்கு மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.   நம் வங்காளத்தை இப்போது, எந்தத் திசையில் கொண்டு செல்கிறது டிஎம்சி அரசாங்கம்?  

ஒருகாலத்தில் வங்காளத்திலே, இராமகிருஷ்ண மிஷனுக்கு மிரட்டல் விடப்படும், ஆசிரமத்தில் காலித்தனம் நடக்கும் என்று, நாட்டுமக்கள் எப்போதாவது நினைத்திருப்பார்களா?  

ஆனால், தன்னுடைய வாக்குவங்கியை குஷிப்படுத்த வேண்டி, டி எம் சி அரசாங்கம், வரம்பை மீறிக் கொண்டிருக்கிறது.  

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories