February 24, 2026, 3:09 PM
30.6 C
Chennai

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

pm modi in bihar - 2026

(உ.பி. மாநிலம் மீரட்டில் நடந்த புதிய திட்டங்கள் தொடங்கும் மற்றூம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸின் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம் குறித்து விமர்சித்தார். அதில் அவர் பேசியவை….)

தேசத்திலேயே, சில அரசியல் கட்சிகள் இருக்கின்றன, இவற்றால் பாரதத்தின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. இப்போது தான் நீங்களே கவனித்திருக்கலாம், அதாவது பாரதத்திலே, உலகத்திலேயே மிகப்பெரிய, ஏஐ உச்சிமாநாடு நடைபெற்றது. 

உலகெங்கிலிருமிருந்தும், 80க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் தில்லிக்கு வந்திருந்தார்கள்.  உலகத்தினுடைய சுமார், 20 குடியரசுத் தலைவர்கள் பாரதம் வந்திருந்தார்கள்.  இலட்சக்கணக்கான பேர்கள், இந்தியாவின் அனைத்து பாகங்களிலிருந்தும், தில்லியில் கூடியிருந்தார்கள்.  உலகின் வளர்ந்துவரும் நாடுகளிலே, இப்படிப்பட்ட மாநாடு, இதுவரை நடந்ததே இல்லை.  

நான் இங்கே மீரட்வாசிகளிடம் கேட்க விரும்புகிறேன்.   இப்போது நடந்து முடிந்த ஏஐ மாநாடு இருக்கிறதே, இது உங்களுக்குப் பெருமையாக இருக்கிறதா இல்லையா?   முழுச்சக்தியோடு கூறுங்கள் உங்களுக்கு பெருமையாக இருக்கிறதா இல்லையா?  

உங்களைத் தலைநிமிரச் செய்கிறதா இல்லையா?  உங்கள் நெஞ்சை விம்மச் செய்ததா இல்லையா?   இந்தப் பணி பாரதத்திற்காக நடத்தப்பட்டதா இல்லையா?   பாரதத்தின் இளைஞர்களுக்காக செய்யப்பட்டதா இல்லையா?  பாரதத்தின் எதிர்காலத்தை மாற்ற அமைக்கப்பட்டதா இல்லையா? 

21ஆம் நூற்றாண்டில் தலைமை தாங்கச் செய்யப்பட்டதா இல்லையா?  நாடு முழுவதும், புளகாங்கிதம் அடைந்தது.  ஆனால் காங்கிரஸும், அதனுடைய சூழலமைப்பும் என்ன செய்தார்கள்?   நண்பர்களே காங்கிரஸ் கட்சி, பாரதத்தினுடைய, உலகளாவிய ஒரு ஏற்பாட்டினை, தன்னுடைய கேவலமான, மற்றும் அப்பட்டமான, அரசியலின் களமாக ஆக்கிவிட்டார்கள். 

மாநாடு நடந்த இடத்திலே, அயல்நாட்டு விருந்தினர்கள் முன்பாக, காங்கிரஸின் தலைவர்கள், உடைகளைக் கழற்றிப்போட்டு வந்தார்கள்.  நான் காங்கிரஸ்காரர்களைக் கேட்கிறேன். 

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

காங்கிரஸின் தலைவர்கள், அங்கே செய்தவை எல்லாம், என்ன காட்டுகிறது என்றால், நம் தேசத்தீன் மிகப்பழமையான கட்சி, கருத்தியல் ரீதியாக, எந்த அளவுக்கு காலியாகி விட்டது என்றால், இத்தனை கேவலமாகி விட்டது என்றால், இதை யாராலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. 

நாம் எல்லோரும் எப்படிப்பட்டவர்கள் என்றால், நம் கிராமங்களிலே, யார் வீட்டிலாவது திருமணம் நடக்கிறது என்றால், கிராமம் முழுவதும், அதை வெற்றிகரமாக நடத்திமுடிக்க, முழுமனதோடு ஈடுபடுகிறது. 

அப்போது தான், விருந்தாளிகள், கிராமம் பற்றிய நல்ல எண்ணத்தோடு செல்வார்கள்.   ஆனால் காங்கிரசோ, தன்னுடைய தேசத்திற்கே, அவப்பெயர் ஏற்படுத்துவதிலே முனைந்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Entertainment News

Popular Categories