
காச்சிகுடா மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து நிரந்தர ரயிலாக மாற்ற இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது .
07191/07192 || காச்சிகுடா மதுரை சிறப்பு நிரந்தர சேவையில்
17615/17616 || காச்சிகுடா தூத்துக்குடி EXP
கொரோனா காலகட்டத்திற்கு முன்பில் இருந்தே பல ஆண்டுகளாக இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத் மற்றும் மதுரை இணைக்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயிலாக திருவண்ணாமலை வழியே இயக்கப்பட்டு வருகிறது! ஆனால் நிரந்தரமாக்கப்படாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்தது! இப்போது அதனை நிரந்தரமாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
வண்டி எண் : 17615/17616 | காச்சிகுடா – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், வழி : கர்னூல் சிட்டி தோன் கூட்டி அனந்தபூர் தர்மாவரம் பகாலா காட்பாடி வேலூர் காண்ட் திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் கோவில்பட்டி.
இந்த ரயில் திங்கள் இரவு காச்சிகுடாவில் புறப்பட்டு புதன் காலை தூத்துக்குடி வந்து சேரும் . மீண்டும் தூத்துக்குடியில் இருந்து புதன் காலை புறப்பட்டு வியாழன் மதியம் காச்சிகுடா சென்று சேரும் !
முதல் முறையாக தூத்துக்குடியில் இருந்து நேரடியாக ஹைதராபாத் செல்வதற்கு ரயில் சேவை கிடைக்கிறது. இந்த ரயில் மூலம் வாரத்தில் ஒரு நாள் மதுரை தஞ்சாவூர் திருவண்ணாமலை திருப்பதி ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவை தூத்துக்குடிக்கு கிடைக்கும் . மேலும் ஹைதராபாத்தில் இருந்து திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பக்தர்கள் தூத்துக்குடி வரை வந்து இந்த ரயிலை பயன்படுத்த முடியும்.
ஹைதராபாத் டூ திருவண்ணாமலை வரும் ஏராளமான பக்தர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ள ஒன்றாக இப்போது இருந்து வருகிறது! இப்போது இது நிரந்தர ரயிலாக இது மாறி உள்ளது.
காச்சிகுடா மதுரை சிறப்பு ரயில் சேவை மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது! அந்த சேவை முடிந்த பிறகு வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ரயில் நிரந்தர சேவையாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி ஹைதராபாத்தில் இருந்து நேரடியாக தூத்துக்குடி வரை ரயிலில் சொல்லலாம். மேலும் இந்த ரயிலுக்கு இனி ஒவ்வொரு 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் கிடைக்கும்! சிறப்பு ரயிலாக இயங்குவதால் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறது; இனி அந்த சிக்கல் கிடையாது .
ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.



