ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

railway news - 2026
#image_title

காச்சிகுடா மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டித்து நிரந்தர ரயிலாக மாற்ற இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது . 

 07191/07192 || காச்சிகுடா மதுரை சிறப்பு நிரந்தர சேவையில் 
 17615/17616 || காச்சிகுடா தூத்துக்குடி EXP

கொரோனா காலகட்டத்திற்கு முன்பில் இருந்தே பல ஆண்டுகளாக இந்த சிறப்பு ரயில் ஹைதராபாத் மற்றும் மதுரை இணைக்கும் வகையில் வாராந்திர சிறப்பு ரயிலாக திருவண்ணாமலை வழியே இயக்கப்பட்டு வருகிறது! ஆனால் நிரந்தரமாக்கப்படாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்தது! இப்போது அதனை நிரந்தரமாக மாற்றுவதற்கு இந்திய ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

வண்டி எண் : 17615/17616 | காச்சிகுடா – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், வழி : கர்னூல் சிட்டி தோன் கூட்டி அனந்தபூர் தர்மாவரம் பகாலா காட்பாடி வேலூர் காண்ட் திருவண்ணாமலை விழுப்புரம் கடலூர் சிதம்பரம் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் கோவில்பட்டி. 

இந்த ரயில் திங்கள் இரவு காச்சிகுடாவில் புறப்பட்டு புதன் காலை தூத்துக்குடி வந்து சேரும் . மீண்டும் தூத்துக்குடியில் இருந்து புதன் காலை புறப்பட்டு வியாழன் மதியம் காச்சிகுடா சென்று சேரும் !

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

முதல் முறையாக தூத்துக்குடியில் இருந்து நேரடியாக ஹைதராபாத் செல்வதற்கு ரயில் சேவை கிடைக்கிறது. இந்த ரயில் மூலம் வாரத்தில் ஒரு நாள் மதுரை தஞ்சாவூர் திருவண்ணாமலை திருப்பதி ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நேரடி ரயில் சேவை தூத்துக்குடிக்கு கிடைக்கும் . மேலும் ஹைதராபாத்தில் இருந்து திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பக்தர்கள் தூத்துக்குடி வரை வந்து இந்த ரயிலை பயன்படுத்த முடியும்.

ஹைதராபாத் டூ  திருவண்ணாமலை வரும் ஏராளமான பக்தர்களுக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ள ஒன்றாக இப்போது இருந்து வருகிறது! இப்போது இது நிரந்தர ரயிலாக இது மாறி உள்ளது.

காச்சிகுடா மதுரை சிறப்பு ரயில் சேவை மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது! அந்த சேவை முடிந்த பிறகு வரும் ஏப்ரல் மாதம் முதல் இந்த ரயில் நிரந்தர சேவையாக இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி ஹைதராபாத்தில் இருந்து நேரடியாக தூத்துக்குடி வரை ரயிலில் சொல்லலாம். மேலும் இந்த ரயிலுக்கு இனி ஒவ்வொரு 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் கிடைக்கும்! சிறப்பு ரயிலாக இயங்குவதால் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட்டு கொண்டிருக்கிறது; இனி அந்த சிக்கல் கிடையாது . 

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories