ஹைதராபாத் வெடர்னரி டாக்டர் படுகொலை பற்றி தரக்குறைவாக எழுதி சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்த இளைஞன் கைது செய்யப் பட்டான்.
சொற்களால் வர்ணிக்கவோ மனதால் நினைக்கவோ முடியாத கோரம் இது. இப்படிப்பட்ட சொல்லொணாத் துயரம் பற்றி கூட சில தீயவர்கள் கேவலமாக கருத்திட்டு வருகிறார்கள். பெண்களுக்கு எதிராக எழுதிய அப்படிப்பட்ட ஓர் இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
உதவியற்ற நிலையில் பயந்து நின்ற ஒரு பெண்ணின் மேல் இரவில் ஓநாய்களாக பாய்ந்து அவரை மூக்கையும் வாயையும் பொத்தி மூச்சு விட முடியாமல் செய்து கொன்ற செய்தி நாட்டையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நினைத்தாலே உடல் நடுங்குகிறது. பெண்களையும் பெற்றவர்களையும் குலை நடுங்கச் செய்கிறது.
ஆனால் அத்தகைய கொடுமை குறித்துக் கூட சில கயவர்கள் தரக்குறைவான தவறான கருத்துகளை வெளியிடுகிறார்கள். நிஜாமாபாதில் அப்படிப்பட்ட இளைஞனை காவல்துறை பிடித்துள்ளது.
திசா சம்பவம் பற்றி அசிங்கமாக தரக்குறைவாக காமெண்ட்ஸ் எழுதிய நிஜாமாபாதைச் சேர்ந்த இளைஞனை ஹைதராபாத் சிபிஎஸ் போலீசார் செவ்வாயன்று கைது செய்தனர்.
நவீபேட் மண்டலம் பிகீராபாதைச் சேர்ந்த சவான் ஶ்ரீராம் (22) என்ற ஸ்டாலின் ஸ்ரீராம் பேஸ்புக்கில் தரக்குறைவான போஸ்ட் போட்டதை போலீசார் கண்டறிந்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண்களுக்கு எதிராக நவம்பர் 30-ஆம் தேதி இது போன்ற போஸ்ட்களை சிலர் ஷேர் செய்து வந்தது போலீசார் கவனத்திற்கு வந்தது. மேலும் இதுபோன்ற சிலரை சைபர் கிரைம் போலீஸார் தேடி வருகின்றனர்.