உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஒரு கிராமத்தில் நாலு வயதான சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார்.
அப்போது அவரின் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் வசிக்கும் 14 வயதான டீனேஜ் சிறுவன் அந்த சிறுவனோடு நட்பு கொண்டு பழகினார்.
மேலும் அந்த டீனேஜ் சிறுவனுக்கு அடிக்கடி செல்போனில் பலான படங்களை பார்க்கும் வழக்கமிருந்துள்ளது.
அதனால் அந்த 14 வயதான டீன் ஏஜ் இளைஞர் அந்த நாலு வயதான சிறுவன் விளையாடுவதை வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் பார்த்தார்.
பிறகு தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனை ஒரு ஒதுக்குபுறமான பகுதிக்கு இழுத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் .
இதனால் அந்த சிறுவன் அழுதுகொண்டே இந்த விஷயத்தை தன்னுடைய தாயாரிடம் கூறினார் .
அதை கேட்டு அழூதுகொண்டிருந்த அந்த தாயாரை அக்கம் பக்கத்தினர் விசாரித்தனர். அப்போது அந்த சிறுவனுக்கு நடந்த கொடுமையை அவர் கூறினார் .
அனைவரும் அங்குள்ள காவல் நிலையம் சென்று அந்த 14 வயதான சிறுவன் மீது புகார் கூறினர். போலீசார் வழக்கு பதிந்து அந்த 14 வயதான சிறுவனை கைது செய்து சிறார் வாரியத்துக்கு அனுப்பினர் .