நிலம் கையகப் படுத்தும் மசோதா மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு

புது தில்லி: நிலம் கையகப்படுத்துதல் மசோதா மீது மக்களவையில்  செவ்வாய்க்கிழமை இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. முன்னதாக, இந்த மசோதா மீதான விவாதம் திங்கள்கிழமை நேற்று தொடங்கியது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா கட்சியும் தனது ஆட்சேபங்களை எழுப்பியிருந்தது. முன்னதாக, இந்த மசோதாவை நிறைவேற்ற  எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற பல்வேறு கட்சித் தலைவர்களையும் மத்திய அமைச்சர்கள் சந்தித்தனர். எனினும், இந்த முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் திருத்தங்களைச் செய்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, மக்களவையில் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதா அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதாவை தாங்கள் எந்த வடிவத்தில்  கொண்டு வந்தோமோ அதே வடிவில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. அப்படி இருந்தால், இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் என்று அது தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நேற்று தொடங்கியது. இது  குறித்து சிவசேனா கட்சி எம்.பி. அரவிந்த் சாவந்த் பேசுகையில், “”விவசாயிகளிடம் இருந்து நிலத்தைக் கையகம் செய்வதற்குப் பதிலாக அவற்றை குத்தகைக்கு எடுப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இதன்மூலம், நிலத்தை வழங்குவோருக்கு குத்தகை மூலம் தொடர்ந்து நிலையான வருமானம் கிடைக்கும்” என்றார். தெலுங்கு தேச எம்.பி. ஜெயதேவ் கல்லா, “”ஆந்திரத்தில் புதிய தலைநகரை அமைப்பதற்காக விவசாயிகளுக்கு சாதகமான நிலம் கையகக் கொள்கையை மாநில அரசு உருவாக்கியுள்ளது. அதன் அடிப்படையில், நிலம் கையக மசோதாவை மத்திய அரசு மாற்றியமைக்க வேண்டும்” என்று கோரினார். தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே, “”விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டியது கட்டாயம் என்ற ஷரத்தை அரசு நீக்கக் கூடாது. அவ்வாறு நீக்குவது விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக அமையும்” என்றார். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள், மசோதாவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அதை விரிவாகப் பரிசீலிப்பதற்காக நாடாளுமன்ற நிலைக் குழுவுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது, எம்.பி.க்களின் விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, இந்த மசோதா நிறைவேற எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் அவசரச் சட்டத்துக்கு மாற்றான இந்த மசோதா, அடுத்த மாதம் 5ஆம் தேதிக்குள் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். வரும்  20ஆம் தேதி வரைதான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதன் பிறகு மசோதாவை நிறைவேற்ற இயலாது. சமூகம் மற்றும் நாட்டின் நலனைக் கருதி, நிலம் கையக மசோதாவில் மேலும் திருத்தங்களைச் செய்யவும் அரசு தயாராக உள்ளது என்றார். இத்தகைய சூழலில், மக்களவையில் இன்று இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. மசோதாவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories