கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி சம்பவம் இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் முதலில் சுங்கசாவடியில் ஒரு லாரி ஒன்று கட்டணம் செலுத்த நின்று கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் மிகவும் வேகமாக வந்த கார் ஒன்று தன்னுடைய கட்டுப்பாட்டை இழந்து லாரியின் பின்னே வேகமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் அந்த காரின் முன்பகுதி லாரியின் அடியில் சென்று மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. காரின் முன்பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளது.
அந்த லாரியை எடுத்தப் பிறகு அங்கு இருந்த சுங்கசாவடி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் காரில் இருந்தவர்களின் நிலையை பார்த்துள்ளதாக தெரிகிறது. அதில் காரில் பயணம் செய்த மூன்று பேரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த வீடியோ காண்பரை பதைப்பதைக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Freak accident on National Highway near Chitradurga toll gate. A speeding car rams into a tanker waiting at the toll booth. 3 people killed. Investigation on. pic.twitter.com/UaqkTQJDwO
— Deepak Bopanna (@dpkBopanna) February 3, 2022