
ஜம்மு-காஷ்மீரில் உள்ள வடமேற்கு குல்மார்க்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
இன்று காலை 11.8 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.0 ஆகப் பதிவான நிலநடுக்கத்தில் நீளம் 73.31 ஆகவும், 15 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டது.
மேலும் இன்று அதிகாலை பஹல்காமில் இருந்து தென்-தென்மேற்கே 15 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 3.2 ஆகவும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை.