மும்பை: சிவசேனாவின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார் ஷோபா டே. ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் ஷோபா டே, துவக்கத்தில் மாடல் அழகியாக இருந்தவர். 1970களில், பத்திரிகையாளர் ஆனவர். மகாராஷ்டிராவில் பிறந்த, மராட்டிய இனத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஷோபா டே, இப்போது, சிவசேனாவின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். மும்பை திரையரங்குகளில் பிரதான நேரமான 6 மணியில் இருந்து 9 மணி வரை மராத்தி திரைப்படத்தைதான் வெளியிட வேண்டும் என மகாராஷ்டிர மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து பத்திரிகையாளர் ஷோபா டே (67) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், மகாராஷ்டிர மாநில அரசின் இந்த உத்தரவு, ரவுடித்தனம் போல உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஷோபா டேயின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ‘சாம்னா’ பத்திரிகை, மாவீரர் சிவாஜியும், பால் தாக்கரேயும், தாதாகிரி என நீங்கள் குறிப்பிடும் ரவுடித்தனத்தை பின்பற்றியிருக்காவிட்டால், ஷோபா டே, நீங்கள் பாகிஸ்தானில்தான் பிறந்திருப்பீர்கள். நள்ளிரவில் நடைபெறும், ‘பார்ட்டி’களில், பர்கா அணிந்தபடி தான் பங்கேற்றிருக்க வேண்டும். அந்தச் செய்திகள், பத்திரிகைகளின் மூன்றாம் பக்கத்தில் வந்திருக்கும் என்று கண்டித்திருந்தது. எழுத்தாளர் ஷோபா டேயின் மற்றொரு, ட்விட்டர் பதிவில், ‘தியேட்டர்களில் இனி ‘பாப்கார்ன்’ விற்பதற்கு பதிலாக, மராத்தியர்களின் பாரம்பரிய உணவுகளான, ‘வடாபாவ், தாஹிமிசால்’போன்றவைதான் விற்கப்படும் என, கேலியாகக் குறிப்பிட்டிருந்தார். இது மராட்டிய கலாசாரத்தை அவமானப்படுத்தும் செயல் எனக் கூறி சிவசேனா தொண்டர்கள், ‘வடாபாவ், தாஹி மிசால்’ ஆகியவற்றை தட்டுகளில் ஏந்தி, ஷோபா டேயின் மும்பை வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், ”இம்மாதிரியான அறிக்கைகளை எந்த மராத்தியனும் ஏற்க மாட்டான்,” என, எச்சரித்திருக்கிறார்.
சிவசேனாவின் கருத்து தாக்குதலில் பெண் எழுத்தாளர் ஷோபா டே!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari