செங்கோட்டை டூ தில்லி செங்கோட்டை!: ‘அம்மா’வுக்காகத் தயாராகுது? திருநெல்வேலி மாவட்டத்தின் கடையநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்டது செங்கோட்டை தாலுகா. இங்கே அதிமுக சார்பில் நின்று போட்டியிட்டு வென்று அமைச்சர் ஆனவர் செந்தூர்பாண்டி. உடல் நலக் குறைவால் சிகிச்சையில் உள்ள செந்தூர்பாண்டியன் இப்போது இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்கிறார். இதனால், இவர் தன் கட்சித் தலைவி அம்மாவுக்காக பதவி விலகி, தன் தொகுதியில் ‘அம்மா’ போட்டியிட்டு வெற்றி பெற வழிவிடுவார் என்று இந்தத் தொகுதியில் பலரும் பரவலாகப் பேசுவதைக் கேட்க முடிகிறது. அறநிலையத் துறையைத் தாங்கி துவக்கத்தில் ‘அம்மா’வுக்காக கோயில்களில் தடபுடலாக அபிசேக அர்ச்சனை பூஜைகள் நடக்க வழி செய்தவர் ஆயிற்றே! விரைவில் அதிமுக பொதுச் செயலாளார் ஜெயலலிதா தன் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளில் இருந்து வெளியே வந்துவிடுவார் என்றும், உடனே அவர் மீண்டும் போட்டியிட்டு முதல்வர் ஆகிவிடுவார் என்றும் இங்குள்ள அதிமுகவினர் மட்ட்டுமல்லாமல், பொதுமக்களில் பலரும் எண்ணுகின்றனர். அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் நடத்துனர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறிக் கடைக்காரர்கள், வணிகர்களில் சிலர் என்று பரவலாக இந்தக் கருத்தைக் கொண்டிருக்கின்றனர். யாரைச் சந்தித்தாலும் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, ‘அம்மா’ கேஸ் என்னாகும்? வெளில வந்துடுவாங்களா? அவங்க இங்க நின்னு ஜெயிச்சு முதலமைச்சர் ஆயிடுவாங்களாமே! எல்லாரும் சொல்லுறாங்க…. இப்படியாக ஸ்ரீரங்கம் கைவிட்டாலும், செங்கோட்டை கைவிடாது; அம்மா இங்கயிருந்து அடுத்து நேரா தில்லி செங்கோட்டைதான் போவாங்க! வேணும்னா பாருங்களேன்… என்று அதிமுகவினர் சிலர் உற்சாகமாகப் பேசிக் கொள்வதை கேட்க முடிகிறது. நிலம் கையகப் படுத்தல் மசோதா விவகாரத்தில் அதிமுக எடுத்த நிலைப்பாடு, தம்பித்துரைக்கு பாஜக கொடுத்த கௌரவம்… எல்லாம் மத்திய அரசோடு, குறிப்பாக மோடியுடன் ஜெயலலிதா ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார் என்றே பலரும் நம்புகிறார்கள். இதற்கு எதிர்க்கட்சிகளின் இத்தகைய கருத்துப் பிரசாரம் காரணாமாகியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. மக்கள்மன்றங்களின் தீர்மானம் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்றங்களின் தீர்மானம் அல்லவா நடக்கப் போவதைத் தீர்மானிக்கப் போகின்றன?
Less than 1 min.Read
‘அம்மா’ மீண்டும் முதல்வராக தயாராகுது ‘செங்கோட்டை’?
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?
தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
Entertainment News
Previous article

