சென்னையில் ஆந்திரத்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் சூறை

Published:

சென்னை: ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டை வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று நேற்று சூறையாடப்பட்டது. திடீரென அதில் நுழைந்த 2 பேர் பல்பொருள் அங்காடியில் இருந்த ஊழியர்களை வெளியேற்றி அங்காடிக்குள் சென்று உள்ளே இருந்த கம்யூட்டரை உடைத்தனர். அங்கிருந்த பொருட் களையும் சூறையாடி, கல் வீசி கண்ணாடிகளை நொறுக்கினர். இதையடுத்து சம்பவ இடம் விரைந்து வந்த போலீஸார் கடையை சூறையாடிய தமிழர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். பின்னர், இருவரும் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related articles

Recent articles

spot_img