மும்பை: சிவசேனாவின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளார் ஷோபா டே. ஆங்கில பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் ஷோபா டே, துவக்கத்தில் மாடல் அழகியாக இருந்தவர். 1970களில், பத்திரிகையாளர் ஆனவர். மகாராஷ்டிராவில் பிறந்த, மராட்டிய இனத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஷோபா டே, இப்போது, சிவசேனாவின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார். மும்பை திரையரங்குகளில் பிரதான நேரமான 6 மணியில் இருந்து 9 மணி வரை மராத்தி திரைப்படத்தைதான் வெளியிட வேண்டும் என மகாராஷ்டிர மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து பத்திரிகையாளர் ஷோபா டே (67) தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவு செய்திருந்தார். அதில், மகாராஷ்டிர மாநில அரசின் இந்த உத்தரவு, ரவுடித்தனம் போல உள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஷோபா டேயின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ‘சாம்னா’ பத்திரிகை, மாவீரர் சிவாஜியும், பால் தாக்கரேயும், தாதாகிரி என நீங்கள் குறிப்பிடும் ரவுடித்தனத்தை பின்பற்றியிருக்காவிட்டால், ஷோபா டே, நீங்கள் பாகிஸ்தானில்தான் பிறந்திருப்பீர்கள். நள்ளிரவில் நடைபெறும், ‘பார்ட்டி’களில், பர்கா அணிந்தபடி தான் பங்கேற்றிருக்க வேண்டும். அந்தச் செய்திகள், பத்திரிகைகளின் மூன்றாம் பக்கத்தில் வந்திருக்கும் என்று கண்டித்திருந்தது. எழுத்தாளர் ஷோபா டேயின் மற்றொரு, ட்விட்டர் பதிவில், ‘தியேட்டர்களில் இனி ‘பாப்கார்ன்’ விற்பதற்கு பதிலாக, மராத்தியர்களின் பாரம்பரிய உணவுகளான, ‘வடாபாவ், தாஹிமிசால்’போன்றவைதான் விற்கப்படும் என, கேலியாகக் குறிப்பிட்டிருந்தார். இது மராட்டிய கலாசாரத்தை அவமானப்படுத்தும் செயல் எனக் கூறி சிவசேனா தொண்டர்கள், ‘வடாபாவ், தாஹி மிசால்’ ஆகியவற்றை தட்டுகளில் ஏந்தி, ஷோபா டேயின் மும்பை வீட்டின் முன் போராட்டம் நடத்தினர். சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத், ”இம்மாதிரியான அறிக்கைகளை எந்த மராத்தியனும் ஏற்க மாட்டான்,” என, எச்சரித்திருக்கிறார்.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

