குடியரசுத் தலைவர் மாளிகையில் மோதி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
நாட்டின் பிரதமராக மோதி பதவி ஏற்கும் விழா தொடங்கியுள்ளது. இரவு 7 மணிக்கு பிரதமராக பதவி ஏற்கிறார் நரேந்திர மோதி! குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. மோதிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்! மோதியுடன் சுமார் 60 பேர் மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர்!
பதவி ஏற்பு விழாவில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பதவி ஏற்பு விழாவில் பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் மத்திய அமைச்சரவையில் இடம்பெறாது என்று கூறியிருந்த நிதிஷ் குமார், பின்னர் சமாதானம் அடைந்து விழாவில் பங்கேற்றுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி விழாவிற்கு வருகை தந்துள்ளார். நிர்மலா சீதாராமன், ராஜ்நாத்சிங், நிதின் கட்கரி, அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் வருகை தந்தனர்.
அமைதிக்கான நோபல் பரிசு வென்ற கைலாஷ் சத்யாத்ரி பங்கேற்றுள்ளார். மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் விழாவில் பங்கேற்றுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விழாவில் பங்கேற்றுள்ளார்.
கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.