நாடு மோடியின் தலைமையில் செல்வது ஈஸ்வரனின் திட்டம்: சிவசேனா!

saamna - 2026

மம்தா செய்தது முட்டாள்தனம் என்று கூறியுள்ள சிவசேனாவின் பத்திரிகை சாம்னா, நாட்டை வலிமைப் படுத்துவதற்காக 2வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பது ஈஸ்வர்ய யோஜனா (இறைவனின் திட்டம்) கூறியுள்ளது.

சிவசேனா கட்சியின் அதிகார பூர்வ இதழான சாம்னாவில், அவ்வப்போது பிரதமர் மோதியை புகழ்ந்து கட்டுரைகளும் கருத்துகளும் வெளியாகி வருகின்றன. தற்போது அவர் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள நிலையில், பாஜக., கூட்டணியில் உள்ள சிவசேனா மோதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், மம்தாவை ஒரு குட்டு வைத்துள்ளது.

மம்தா பானர்ஜி, மோதி பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு தனக்கு விடுக்கப் பட்ட அழைப்பை நிராகரித்தது தவறு என்று கூறி சில கருத்துகளையும் அது தெரிவித்துள்ளது.

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன. அவர்களில் முக்கியமானவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா. பதவியேற்பு விழாவில் பங்கேற்க அனுப்பப்பட்ட அழைப்பை மம்தா பானர்ஜி நிராகரித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பதவியேற்பு விழாவிற்கு அழைத்ததுதான் மோதி பதவியேற்பு விழா அழைப்பை மம்தா புறக்கணித்ததற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

மோதியின் பதவியேற்பு விழாவுக்கு அழைக்கப் பட்டவர்கள் இந்தியர்கள் தான். வங்கதேசத்தினர் இல்லை. மற்றவர்களைப் போல் பிரதமரின் பதவியேற்பில் பங்கேற்க அவர்களுக்கும் உரிமை உள்ளது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் குறித்து மோடி எதுவும் பேசவில்லை. மனிதகுலத்திற்காக கலாசாரத்தின்படி புதிய ஆட்சியை நடத்த மோடி நினைக்கிறார். அதனால் தான் அவரது பதவியேற்பை உலகமே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது.

திரிணமுல் காங்கிரஸும் மம்தா பானர்ஜியும் ஜனநாயக விரோதமாகவே உள்ளனர். ஒடிஸாவில் புயல் தாக்கியது. பிரதமர் மோதி வந்தார். உதவினார். இணைந்து செயல்பட்டனர். இத்தனைக்கும் பாஜக., ஒடிஸாவில் தோல்வியே அடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டி விஜயி வீர் என வெற்றி அடைந்தார். பிரதமரை சந்தித்தார். ஆந்திரப் பிரதேசத்துக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டார் பிரதமர். ஆந்திரத்திலும் பாஜக., தோல்வியே அடைந்தது.

மோடியின் 2வது திருவிழா இன்று துவங்குகிறது. மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்பட மோடி விரும்பவில்லை. அதனால் தான் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அவர் அழைப்பு அனுப்பவில்லை.

மோடியின் தலைமையில் நாடு செயல்பட வேண்டும் என்பது ஈஸ்வர்ய யோஜனா… (இறைவனின் திட்டம்) என்று குறிப்பிட்டுள்ளது சாம்னா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories