தாம் மிஸா சிறையில் இருந்ததாக திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதை சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
மத்திய சிறை,வேலூர் சிறை,ஏன் திகார் சிறை கூட கேள்வி பட்டுள்ளேன்.எங்க இருக்கு மிசா சிறை…? கடல்லே இல்லையாம்… @Pandidurai27@sparjaga@itz_katti
திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலைக் காலத்தில் அரசியல் கைதியாக சிறைப்படவில்லை என்றும், அந்தக் காலத்தில் குற்றச் செயல்கள் தடுப்பில் கைது செய்யப் பட்டார் என்றும் அண்மைக் காலமாக ஒரு பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
ஸ்டாலின் மிசாவில் கைதானார் என்று கருணாநிதியால் நம்பவைக்கப் பட்டு, திமுக.,வினர் செவிவழிச் செய்தியாக, கர்ண பரம்பரைக் கதைகளின் வழியாக கேள்விப் பட்டு வந்திருக்கின்றனர். ஆனால், ஆவணங்களின் படி பார்த்தால் அவர் அரசியல் கைதியாக சிறை வைக்கப் படவில்லை, மிஸா காலத்தில் வேறு விவகாரத்தில் கைது செய்யப் பட்டார் என்று அரசியல் வட்டத்தில் குற்றச்சாட்டுகள் எழுப்பப் பட்டு வருவதால், திமுக.,வினர் பெரும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இது சமூக வலைத்தளங்களிலும் எதிரொலிக்கிறது. வழக்கம் போல், இதற்கு பதில் கொடுக்கும் விதமாக சாதிப் பெயர் சொல்லி திட்டி வருகின்றனர் திமுக.,வினர்.
இந்நிலையில் ஸ்டாலின் இது குறித்து பேசிய போது…
மு.க.ஸ்டாலின் மிஸா சிறையில் இருந்தாரா? இதுதான் இப்போ இருக்கக் கூடிய முக்கியமான கேள்வி. எனக்கு இருக்கக் கூடிய எண்ணம்லாம், மிஸாவில் ஒரு வருசம் சிறையில் இருந்து நான் பட்ட கஷ்டங்கள், சித்திரவதைகள் பற்றி கூட கவலைப் படல… ஆனால் இந்த கேடு கெட்ட ஜென்மங்களால் நான் படக்கூடிய அவலத்தை நான் நினைச்சு பாக்கிறப்போ…. காலாகாலத்துக்கும் என்னால் மறக்க முடியாது. அதை நான் வேதனையோடு பதிவு செய்கிறேன். ஆனா அதுக்காக நான் கவலைப்பட..ல…. – என்று பேசினார் மு.க.ஸ்டாலின் .
இது இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேடு கெட்ட ஜென்மம் என்று இதுவரை கருணாநிதியைத் திட்டிக் கொண்டிருந்தவர்களை, பதிலுக்கு இப்போது ஸ்டாலின் கேடு கெட்ட ஜென்மங்கள் என்று ‘பகுத்தறிவின்’ பாற்பட்டு, திட்டிக் கொண்டிருக்கிறார் என்பது மட்டும் உண்மை!