June 14, 2025, 7:05 PM
35.7 C
Chennai

பாஜக.,வில் இணைந்த பால்கனகராஜ்! தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாஅத் மொஹம்மத் ஃபெரோஸும் ஐக்கியம்!

joining bjp
joining bjp

சுயநலத்துக்காக பாஜகவில் இணையவில்லை; பாஜக ஆட்சியில் தான் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். நிம்மதியான வாழ்வை வழங்கும் ஆட்சியாக பாஜகவின் ஆட்சி உள்ளதால், அதில் இணைந்துள்ளேன். சாமானியர்களுக்கான ஆட்சி நம் மோடியின் ஆட்சி… என்றெல்லாம் புகழாரம் சூட்டினார், வழக்கறிஞர் பால்கனகராஜ். இவர், இன்று பாஜக., மாநிலத் தலைவர் முருகன் முன்னிலையில், பாஜகவில் இணைந்த பின்னர் இவ்வாறு பேசியுள்ளார்.

அதே போல், இன்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்முன்னிலையில் தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத்” டாக்டர் A.முகமது ஃபெரோஸும் தன்னை பாஜக.,வில் இணைத்துக் கெண்டார். பாஜக., தேசியவாதிகளின் இருப்பிடம். தேசியவாதத்தை வலியுறுத்தும் எவர் வேண்டுமானாலும் பாஜக.,வில் இணையலாம் என்று குறிப்பிட்டார் மாநிலத் தலைவர் எல்.முருகன்!

bjp joining

சென்னை உயர் நீதிமன்றத்தின் பிரபல வழக்கறிஞர் ஆர்சி பால்கனகராஜ் பாஜகவில் இன்று அதிகார பூர்வமாக இணைந்துள்ளார்.. சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரான பால்கனகராஜுக்கு வழக்கறிஞர் அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தலில் உறுப்பினராக வெற்றி பெற்றவர், பிறகு பார்கவுன்சில் தலைவர் தேர்தலில் போட்டியிட்டார். தமிழ் மாநிலக் கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியைத் தொடங்கி நடத்தி வந்தவர். இவர், இன்று தன் கட்சியையும் பாஜக.,வுடன் இணைத்து, தன்னையும் இணைத்துக் கொண்டார். சென்னை அமைந்தகரையில் உள்ள லட்சுமி திரையரங்கத்தில் உள்ள ஹாலில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது.

திமுகவில் இருந்தவர் பால்கனகராஜ். திமுகவின் பல்வேறு வழக்கு விசாரணை விவகாரங்களை நன்கு அறிந்தவர்! இவரது வருகை தமிழகத்தில் கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று பாஜக.,வினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

Topics

புட்டின் நீங்களுமா?

ஈரானில் உண்மையில் அணு ஆயுதம் இருந்ததா என்பது கேள்விக்குறி. இதே போலத் தான் சதாம் ஹுசைனையும்

திருக்கூடல் மலையும் தென்பழனியும்

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சிவனும் இவரும் ஒரே நேர் கோட்டில் இணையும் படி அமைக்கப்பட்டுள்ளது

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு மதுரையில் அஞ்சலி!

அகமதாபாத் விமான விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு மதுரையில் சிறப்பு பிரார்த்தனை -தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.

சம்பளம் வழங்கக் கோரி மதுரை பல்கலை., பணியாளர்கள் போராட்டம்!

ஆண்டுகளாகவே காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஊழியர்கள், அலுவலர்கள் சம்பளம் ஓய்வூதியம் வழங்கப்படாத கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு

போயிங் போய்விட்டது! 11A மட்டும் தப்பியது!

விமானம் மேலேற முடியாமல் திணறி தரை இறங்கியுள்ளது.அதாவது பறக்க போதிய உந்துவிசை கிடைக்காமல் தரையில் விழுந்துள்ளது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

அகமதபாதில் விமானம் விழுந்து பயங்கர விபத்து!

அமித் ஷா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத் செல்ல உத்தரவிட்டார்.

பெண்களை ‘ஓஸி’ என கேலி பேசும் திமுக.,வினர் இனி வெட்டியாக வீட்டில் அமர்வார்கள்!

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

Entertainment News

Popular Categories