நெல்லை, தென்காசி, மதுரைக்கு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்!

southern railway
southern railway

திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேஸ்வரம், கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அக்டோபர் முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது. அதன் விவரம் …

1) வண்டி எண் 02632 திருநெல்வேலி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி முதல் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.35 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 02631 சென்னை எழும்பூர் – திருநெல்வேலி சிறப்பு ரயில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 7.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6 45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் நெல்லை எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிறுத்தங்களில் நின்று செல்லும்.

2) வண்டி எண் 02661 சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிறப்பு ரயில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 02662 செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் செங்கோட்டையிலிருந்து அக்டோபர் 4ஆம் தேதி முதல் மாலை 06.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.00 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் பொதிகை எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிறுத்தங்களில் நின்று செல்லும்.

3) வண்டி எண் 02613 சென்னை எழும்பூர் – மதுரை தேஜாஸ் சிறப்பு ரயில் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.00 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 02614 மதுரை- சென்னை எழும்பூர் தேஜாஸ் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதி முதல்

மாலை 03.15 மணிக்கு புறப்பட்டு இரவு 09.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்கள் வியாழக்கிழமைகளில் இயங்காது. இந்த ரயில்கள் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

4) வண்டி எண் 02206 ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரத்திலிருந்து அக்டோபர் 2ஆம் தேதி முதல் இரவு 08.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 07.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 02205 சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.25 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல்வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகொட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில்நின்று செல்லும். வண்டி எண் 02205 சென்னை ராமேஸ்வரம் சிறப்பு ரயில் அரியலூர், ஸ்ரீரங்கம் ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

5) வண்டி எண் 06723 சென்னை எழும்பூர் – கொல்லம் சிறப்பு ரயில் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.15 மணிக்கு கொல்லம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06724 கொல்லம் – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் கொல்லத்திலிருந்து அக்டோபர் 4 ஆம் தேதி முதல் மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல்வகுப்பு பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நின்று சென்ற நிறுத்தங்களில்நின்று செல்லும்.

பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த ரயில்களில் பயணிக்க முடியும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு வியாழக்கிழமை (01.10.2020) காலை 8 மணி முதல் துவங்குகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் வழிகாட்டியுள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பின்பற்றப்படும்.‌ அனைத்து பயணிகளுக்கும் உடல் வெப்ப சோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லாத பணிகள் மட்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

உறுதி செய்யப்பட்ட முன்பதிவு பயணச்சீட்டுகள் வைத்துள்ள பயணிகள் மட்டுமே ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பயணிகள் அனைவரும் பயணத்தின்போதும், ரயில் நிலையத்தில் இருக்கும் போதும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பயணிகள் உரிய சோதனைகளுக்காக ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பாக ரயில் நிலையத்திற்கு வருகை தர வேண்டப் படுகிறார்கள். அனைத்து பயணிகளும் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

குளிர்சாதன வசதி பெட்டிகளில் படுக்கை விரிப்புகள், தலகாணி, கம்பளி போர்வை ஆகியவை வழங்கப்பட மாட்டாது. பயணிகள் தங்களது சொந்த படுக்கை விரிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories