அம்புலிமாமா சங்கர் காலமானார்!

Published:

ambulimama-sankar
ambulimama-sankar

அம்புலிமாமா சங்கர் காலமானார்.

இந்தியாவில் மிக அதிகமாக வாசகர்களைப் பெற்ற சிறுவர் மாத இதழ் சந்தமாமா (அம்புலிமாமா)வில் பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான படங்களை வரைந்த சங்கர் செவ்வாய் அன்று மதியம் காலமானார். 97 வயது சங்கர் முதிர்ந்த வயது காரணமாக சென்னை போரூரில் தன் சொந்த இல்லத்தில் காலமானார்.

1924 ஜூலை 19 ல் பிறந்த சங்கரின் லைன் ட்ராயிங் அப்போது பலருக்கும் எழுச்சியூட்டுவதாக இருந்தது.

வேதாளக் கதைகள் தொடர்பாக அவர் வரைந்த விக்ரமாதித்தன் வேதாளம் கோட்டுச் சித்திரங்கள் வாசகர்களின் நினைவில் எப்போதும் நின்றிருக்கும்.

(சந்தாமாமா) அம்புலிமாமா பத்திரிக்கையை வடிவமைத்த ஓவியர்களில் இதுவரை உயிரோடு இருந்தது சங்கர் ஒருவரே!
இப்போது இவருடைய மரணத்தால் அந்த சகாப்தம் முடிந்து போனது.

 

 

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img