சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீனிவாச கல்யாணம்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Published:

srinivasakalyanam singappore - 2026

சிங்கப்பூர் தெலுங்கு சமாஜம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணைந்து ஸ்ரீநிவாச திருக்கல்யாண மகோத்ஸவத்தை சிங்கப்பூர் ‘பாய லேபர்’ சிவன் கோயில் ஆலய வளாகத்தில் நடத்தினர்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தத் திருக்கல்யாண வைபவத்தில் சுப்ரபாத சேவை முதல் ஏகாந்த சேவை வரை நிகழ்ந்த விசேஷங்களுக்கு பக்தர்கள் மிக அதிக அளவில் வந்திருந்தனர்.

srinivasakalyanam singappore2 - 2026

சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியாவிலிருந்து வந்திருந்த பக்தர்கள் பலர், திருமலை திருப்பதியில் நடைபெறும் உத்ஸவத்தின் ஆத்மார்த்தமான அனுபவத்தைப் பெற்றுச் சென்றனர்.

கண்ணுக்கு விருந்தாக நடந்தேறிய இந்த உத்ஸவத்தில் கலை நிகழ்ச்சிகள், பக்தி பாடல்கள், சிறார்களின் நாட்டியம், பெண்களின் கோலாட்டம் போன்றவை சிறப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.

srinivasakalyanam singappore3 - 2026

இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக வருகை தந்திருந்த திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாராவ் தெலுங்கு சமாஜத்தினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார்…

பல சிரமங்களை எதிர்கொண்டு மிகக் குறுகிய கால அளவில் மிகச் சிறப்பாக கல்யாண உத்ஸவத்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றிய தெலுங்கு சமாஜம் உறுப்பினர்களைப் பாராட்டினார் சுப்பாராவ்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!
srinivasakalyanam singappore1 - 2026

திருமலையின் வளர்ச்சி, பக்தர்களுக்கு வசதி செய்து கொடுத்தல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் பாடுபடுவதாக கூறினார் சுப்பாராவ். வெளிநாடுகளிலிருந்து வரும் பக்தர்களுக்காக மேலும் சிறந்த சேவையுடன் விரைவு தரிசனம் செய்விக்கப் பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Related articles

Recent articles

spot_img