கணவர் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருசிற்றம்பலம் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் இவர் தனது இரண்டாவது மகள் ஜோதியை பட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் மணிகண்டபிரபு என்பவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனையடுத்து ஜோதியின் உறவினர் வீட்டிற்கு விருந்திற்காக கணவன் மனைவி இருவரும் சென்றுள்ளனர்.
அதன்பின் உறவினரிடம் அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு மணிகண்டபிரபு ஜோடியை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மணிகண்டபிரபு சிவன் கோவிலுக்கு செல்லாமல் வேறு வழியில் சென்றுள்ளார். அதன்பின் ஜோதி தன் கணவரிடம் வேறு வழியாக எங்கு செல்கிறோம் என்று கேட்டுள்ளார்.
இதனையடுத்து இருசக்கர வாகனத்தை நிறுத்திய மணிகண்டபிரபு காட்டுப்பகுதியில் அடிக்கி வைத்திருந்த மரக்கட்டையை எடுத்து ஜோதியை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேராவூரணி காவல்துறையினர் ஜோதியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மணிகண்டபிரபுவை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் மணிகண்டபிரபு சரண் அடைந்துள்ளார்.
மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறாக கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.