மழை வரும் நேரம்..குடையோடு செல்லுங்கள்…

Published:

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று முதல் 27ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும், ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையாக கூறியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. குறிப்பாக சென்னையில் இந்த ஆண்டு வழக்கத்தை விட முன் கூட்டியே வெயில் அதிகம் காணப்படுகிறது.

யவழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் பகல் நேர சராசரி வெப்ப நிலை 91 டிகிரி பாரன்ஹீட் ஆகும். ஆனால் சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 100.4 டிகிரி வெயில் கொளுத்தியது. அதேபோல் நுங்கம்பாக்கத்திலும் 99.6 டிகிரி வெயில் பதிவானது. இது இயல்பை விட 4 டிகிரி அதிகமாகும். சென்னையில் வெயில் சதம் அடித்ததால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!
120797959 80b4bee0 b78c 4247 9e0c 2bd84a6b6f9e - 2026

Related articles

Recent articles

spot_img