வரும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக., கூட்டணியில் பாமக., இடம் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக., பாமக., கூட்டணி ஏற்பட்டுள்ளது. 2009க்குப் பின்னர் அதிமுக- பாமக., கூட்டணியில் இணைந்துள்ளது!
கூட்டணி குறித்து பாமக., ராமதாஸ் குறிப்பிட்ட போது,
காவிரி பாசன மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்பு;
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
7 தமிழர் விடுதலை செய்ய வேண்டும்
தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு
மணல் குவாரி படிப்படியாக மூட வேண்டும்
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
கூட்டுறவு வங்கியில் உள்ள பயிர் கடன் தள்ளுபடி –
உள்ளிட்ட 10 கோரிக்கையை பாமக அதிமுக.,விடம் முன்வைத்துள்ளது.
அவற்றை நிறைவேற்றுவதாக அதிமுக., கூறியுள்ளது. இதை அடுத்து அதிமுக.,வுடன் பாமக., கூட்டணி அமைந்துள்ளது. பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று ராமதாஸ் கூறினார்.
மேலும், அ.தி.மு.க. – பா.ம.க.கூட்டணி “மக்கள் நல கூட்டணி- “மெகா கூட்டணி”
என்று ராமதாஸ் அறிவித்தார்.
முன்னதாக, கூட்டணி குறித்துக் கூறிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், நாடாளுமன்ற தேர்தலில் பாமக.,வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு தீர்மானிக்கப் பட்டது. 7 மக்களவைத் தொகுதியுடன் 1 மாநிலங்களவையும் ஒதுக்கப் பட்டுள்ளது. 21 தொகுதி இடை தேர்தலில் அதிமுகவிற்கு பாமக முழு ஆதரவு தரும் என்று கூறினார்.