வண்ணத்துப் பூச்சி..! காலம் உணர்த்திய பாடம்!

butterflies2 - 2026
வண்ணத்துப் பூச்சி.. நாக்பூரில் எடுத்த படம்..

இயற்கையின் படைப்பில் மிக அருமையான உயிரினம் அது. துருதுருவென பறந்தாலும் பறவையாய் நாம் அதை நினைப்பதில்லை. ஒருபோதும் அடுத்த உயிரினத்திற்கு துன்பம் இழைக்காத இனமாம் அது. சாதுவான இனம். பல வண்ணங்களிலும், பலவிதமான வடிவமைப்பும் கொண்ட இனம்.

நாம் அதை பின் தொடர முயன்றாலும் நம்மால் அதனருகில் நெருங்க முடியாது. அதனைப் பார்த்தாலே பார்ப்பவர்களுக்கு புத்துணர்வு உண்டாகும்.ஆம்! படிப்பவர்கள் சரியாக யூகித்தீர்கள். பட்டாம்பூச்சி என்கிற வண்ணத்துப் பூச்சியே அந்த இனம்!!

வர்தாவில் என் வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் பூக்களின் விருந்தாளிகளாக வரும் வண்ணத்துப்பூச்சிகளினால் மனம் மகிழும். ஒருநாள் ஊஞ்சலில் உட்கார்ந்து இயற்கயை ரசித்து கொண்டிருந்த போது, ஒரு பட்டாம்பூச்சி மூலிகைச் செடியில் உட்கார்ந்தது. அதன் வடிவமைப்பு ( Design) என்னை வெகுவாக கவர்ந்தது. உடனே, அவசர அவசரமாக என் கேமராவில் அதை கைது செய்தேன்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் போட்டோவை பார்த்த நான் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தேன். வண்ணத்துப்பூச்சியின் புகைப்படம் தெளிவாக இல்லை. மனம் ஒப்பவில்லை. முயன்றேன், முயன்றேன், அதனை தொடர என்னால் இயலவில்லை. எப்பொழுது வண்ணத்துப்பூச்சி பூக்களில் ஓய்வு எடுக்குமோ, அப்பொழுது என் கேமரா என் வசம் இருக்காது.

எப்பொழுதெல்லாம் அந்த ஒருவகை வண்ணத்துப்பூச்சியை காணும்போது மனதில் ஒரு அலையோசை தோன்றும். மனக்கனவாகவே இருந்தது.

நாட்கள் கடந்தன. வர்தாவில் இருந்து நாக்பூருக்கு குடி பெயர்ந்தோம். நாங்கள் இருக்கும் வீட்டின் பின்புறம் ஒருநாள் துணி உலர்த்த போன போது, சிமெண்ட் தரையில் அதே வடிவமைப்பை கொண்ட பட்டாம்பூச்சி. மகிழ்ச்சியில் மனம் மகிழ்ந்தது. இம்முறை வாய்ப்பை நழுவ விட மனமில்லை. உடனே ஓடிச்சென்று என் கைப்பேசியில் படமெடுத்தேன்.

என்ன ஆச்சரியம். பலமுறை எனக்கு போக்குக்காட்டிய அதே வகை வண்ணத்துப்பூச்சி தற்போது இளம் நடிகை மாதிரி அழகாக எனக்கே எனக்காக போஸ் கொடுத்தது(!).

butterflies - 2026
வண்ணத்துப்பூச்சி.. வார்தாவில் எடுத்த படம்

என்ன கொள்ளை அழகு!. வண்ணக் கலவையை சொல்வதா(!)(?), வண்ண வடிவமைப்பை சொல்வதா(!)(?). கருப்பு வெள்ளை வண்ணத்தில் கொஞ்சம் நீலமும், ஆரஞ்சுமாக கவர்ந்திழுக்கும் வண்ணக் கலவை. வடிவமைப்போ பெண்ணின் கருப்பையில் உருவான கருவைப்(Initial Stage) போன்றது. பல நாட்களாக நான் நினைத்துக் கொண்டிருந்த அதே பட்டாம்பூச்சியானது எனக்கு ஒர் அருமையான வாய்ப்பை வழங்கியதால் மகிழ்ச்சியுற்றேன்.

இந்த நிகழ்வினால் நான் அறிந்து கொண்ட விஷயங்கள்::

???? நினைப்பதே நடக்கும்;
???? ஆதலால் நல்லதையே நினைக்க வேண்டும்.
???? காலம் தம் பங்கினை செய்யும் வரை காத்திருக்க வேண்டும்.
???? வண்ணத்துப்பூச்சியைப் போல வாழ்வின் அனுதினமும் ரசிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.
???? அவ்வாறு மனதில் கொண்டால் நம் வாழ்விலும் பல அற்புத வண்ணமயமான நிகழ்வுகளும், எதிர்மறை நிகழ்வுகளிலும் தைரியமாக இருக்க முடியும்.

அனுபவக் கட்டுரை: – ஜெயஸ்ரீ.எம்.சாரி, நாக்பூர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories