அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது குடும்பத்துடன் அடையாறில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவுகளில், தெரிவித்தவை…
நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்துகள் வராததால், கோபமடைந்த மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில் போதிய பேருந்து வசதிகளை அதன்பிறகாவது செய்யத்தவறிய அதிகாரிகள், காவல்துறையை வைத்து பொதுமக்கள் மீது தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகக் கடமை ஆற்றும்படி ஒருபக்கம் வலியுறுத்திவிட்டு, இன்னொருபுறம் அரசு காட்டும் இந்த அலட்சியம் வேதனைக்குறியது. தங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவாவது அவர்களுக்கு போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஜனநாயகக் கடமை ஆற்றும்படி ஒருபக்கம் வலியுறுத்திவிட்டு, இன்னொருபுறம் அரசு காட்டும் இந்த அலட்சியம் வேதனைக்குறியது. தங்கள் சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்பவாவது அவர்களுக்கு போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) April 18, 2019