ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது மு.க.ஸ்டாலின் சொல்லுவதை கேட்க… அவரின் கோரிக்கையை ஏற்க… என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளிப்படுத்தியுள்ள கருத்து இப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ராஜேந்திர பாலாஜி, திமுக., பற்றிக் குறிப்பிட்ட போது அதுஇந்துக்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டு, திமுக., வின் ஹிந்து விரோதச் செயல்களை பட்டியலிட்டுப்பேசினார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் இதனை வலுவாக குறிப்பிட்டுப் பேசினார். இதனால் திமுக., அரண்டு போனது. இதை அடுத்து 99சதவீதம் இந்துக்களை உறுப்பினர்களாகக் கொண்ட திமுக., தமது இந்து விரோதச் செயல்கள் தங்களது உறுப்பினர்களை ஏமாற்றி குழப்பத்தில் ஆழ்த்தி எதிரிகள் ஆக்கி விடக் கூடாது என்று அச்சப்பட்டது. இதை அடுத்து உடனடியாக ஒரு கருத்தைத் தெரிவித்தார் ஸ்டாலின்.
தமது சமூக வலைத்தளப்பக்கத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின்,
பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திரபாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு; சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்! – என்று குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள ராஜேந்திர பாலாஜி,
KT Rajenthra Bhalaji @RajBhalajioffl
ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது மு.க.ஸ்டாலின் சொல்லுவதை கேட்க… அவரின் கோரிக்கையை ஏற்க… – என்று பதிலடி கொடுத்துள்ளார்.