பரிதாபம்..! ஜிபிஎஃப் வருமா?! ஓய்வு பெறும் நாளில் கவலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்…!

Published:

telangana suicide1 - 2026

மாலை வேலையில் ஓய்வு பெற்றதற்கான சன்மானம்… விடியற்காலை அலுவலகத்தில் மரணம்… இது இந்த ஊழியரின் வாழ்க்கைச் சோகம்! அதுவும் அலுவலக இறுதி நாளே வாழ்வின் இறுதி நாளானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மாலை வேலை ஓய்வுக்கான விடை கொடுக்கும் தருணத்தில் அந்த நபர் இந்த உலகத்தில் இருந்தே விடைபெற்றார். அதற்குக் காரணம், எதிர்காலக் கவலை, எப்படி வாழ்க்கையை தள்ளப் போகிறோம் என்ற ஏமாற்றம் எல்லாம்தான்!

இறுதி நாளன்று பணி நிமித்தம் இரவுப் பணிக்கு வந்த அந்தப் பணியாளர் விடியற்காலை அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கினார். வேலையிலிருந்து மட்டுமல்ல… உலகத்தில் இருந்தே நிரந்தரமாக ஓய்வு பெற்றார். இந்த சம்பவம் அலுவலகத்தில் அனைவரையும் கலங்க வைத்தது.

தெலங்காணா பால்வன்ச என்ற இடத்தில் உள்ள கேடிபிஎஸ் கொத்தகூடம் தெர்மல் பவர் ஸ்டேஷன் அலுவலகத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது.

telangana suicide - 2026

வெங்கடேஸ்வர்லு கேடிபிஎஸ் ஐந்தாவது நிலை பிளான்ட் அட்டெண்டன்ட் ஆக பணிபுரிந்து வந்தார். வியாழனன்று அவருக்கு பணி ஓய்வுபெறும் இறுதி நாள். அன்று நைட் டூட்டி பார்க்க வந்த வெங்கடேஸ்வர்லு வேலை முடிவதற்கு சிறிது நேரம் முன்பு வெள்ளி அன்று விடியற்காலை தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தார்.

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

வேலையிலிருந்து ஓய்வு பெறும் அவருக்கு வெள்ளிக்கிழமை மாலை சன்மானம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். வேலை ஓய்வு பெற்றபின் ஜிபிஎஃப் வராது என்று அவர் வேதனையில் இருந்ததாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாகவே அவர் ஜிபிஎஃப் குறித்து கவலையில் இருந்தார். மாதம் ரூ 3000 மட்டுமே ஈபிஎஃப் வரும் என்பதால் அந்த தொகையில் பணி ஓய்வு பெற்ற பின் தன் குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற கவலையில் இருந்தார். பணிக் காலத்தை நீடிப்பதற்கு மிகவும் விரும்பினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை.

telangana suicide2 - 2026

அவர் குடும்பத்திற்கு நீதி கேட்டு பணியாளர்கள் சங்க தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அலுவலகத்திலிருந்து உடலை எடுத்துச் செல்ல விடாமல் ஆம்புலன்சை தடுத்தார்கள். அதிகாரிகள் அவர் குடும்பத்திற்கு ஜிபிஎஃப் கிடைக்கச் செய்வது தொடர்பாக முதலமைச்சர் கேசிஆரின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக வாக்களித்தனர். பின்னர் ஊழியர்கள் போராட்டத்தை நிறுத்தினர்.

வெங்கடேஸ்வர்லுவுக்கு இரு பெண்கள். ஒரு மகன். ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சில மாதங்கள் முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டான். மகனையும் கணவரையும் சில மாதங்களுக்குள் இழந்த அவர் மனைவி உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img