பரிதாபம்..! ஜிபிஎஃப் வருமா?! ஓய்வு பெறும் நாளில் கவலையில் தூக்கிட்டு தற்கொலை செய்தவர்…!

telangana suicide1 - 2026

மாலை வேலையில் ஓய்வு பெற்றதற்கான சன்மானம்… விடியற்காலை அலுவலகத்தில் மரணம்… இது இந்த ஊழியரின் வாழ்க்கைச் சோகம்! அதுவும் அலுவலக இறுதி நாளே வாழ்வின் இறுதி நாளானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மாலை வேலை ஓய்வுக்கான விடை கொடுக்கும் தருணத்தில் அந்த நபர் இந்த உலகத்தில் இருந்தே விடைபெற்றார். அதற்குக் காரணம், எதிர்காலக் கவலை, எப்படி வாழ்க்கையை தள்ளப் போகிறோம் என்ற ஏமாற்றம் எல்லாம்தான்!

இறுதி நாளன்று பணி நிமித்தம் இரவுப் பணிக்கு வந்த அந்தப் பணியாளர் விடியற்காலை அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கினார். வேலையிலிருந்து மட்டுமல்ல… உலகத்தில் இருந்தே நிரந்தரமாக ஓய்வு பெற்றார். இந்த சம்பவம் அலுவலகத்தில் அனைவரையும் கலங்க வைத்தது.

தெலங்காணா பால்வன்ச என்ற இடத்தில் உள்ள கேடிபிஎஸ் கொத்தகூடம் தெர்மல் பவர் ஸ்டேஷன் அலுவலகத்தில் இந்த சம்பவம் நேர்ந்தது.

telangana suicide - 2026

வெங்கடேஸ்வர்லு கேடிபிஎஸ் ஐந்தாவது நிலை பிளான்ட் அட்டெண்டன்ட் ஆக பணிபுரிந்து வந்தார். வியாழனன்று அவருக்கு பணி ஓய்வுபெறும் இறுதி நாள். அன்று நைட் டூட்டி பார்க்க வந்த வெங்கடேஸ்வர்லு வேலை முடிவதற்கு சிறிது நேரம் முன்பு வெள்ளி அன்று விடியற்காலை தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தார்.

வேலையிலிருந்து ஓய்வு பெறும் அவருக்கு வெள்ளிக்கிழமை மாலை சன்மானம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். வேலை ஓய்வு பெற்றபின் ஜிபிஎஃப் வராது என்று அவர் வேதனையில் இருந்ததாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களாகவே அவர் ஜிபிஎஃப் குறித்து கவலையில் இருந்தார். மாதம் ரூ 3000 மட்டுமே ஈபிஎஃப் வரும் என்பதால் அந்த தொகையில் பணி ஓய்வு பெற்ற பின் தன் குடும்பத்தை எப்படி நடத்துவது என்ற கவலையில் இருந்தார். பணிக் காலத்தை நீடிப்பதற்கு மிகவும் விரும்பினார். ஆனால் அவர் ஆசை நிறைவேறவில்லை.

telangana suicide2 - 2026

அவர் குடும்பத்திற்கு நீதி கேட்டு பணியாளர்கள் சங்க தலைவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அலுவலகத்திலிருந்து உடலை எடுத்துச் செல்ல விடாமல் ஆம்புலன்சை தடுத்தார்கள். அதிகாரிகள் அவர் குடும்பத்திற்கு ஜிபிஎஃப் கிடைக்கச் செய்வது தொடர்பாக முதலமைச்சர் கேசிஆரின் பார்வைக்கு எடுத்துச் செல்வதாக வாக்களித்தனர். பின்னர் ஊழியர்கள் போராட்டத்தை நிறுத்தினர்.

வெங்கடேஸ்வர்லுவுக்கு இரு பெண்கள். ஒரு மகன். ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் சில மாதங்கள் முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டான். மகனையும் கணவரையும் சில மாதங்களுக்குள் இழந்த அவர் மனைவி உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories