என் தந்தை கொல்லப்பட்டபோது எந்த உறவும் இல்லாமல் உடனடியாக ஓடோடி வந்தவர் ஹெச்.ராஜா என்று, அவருக்காக தேர்தல் களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்கள் கூறியுள்ளனர்.
ஹெச்.ராஜாவிற்காக களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்களைக் கண்டு, சிவகங்கை மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து அண்மையில் மதவெறியர்களால் கொல்லப்பட்ட திருபுவனம் பாமக நிர்வாகியாக இருந்த ராமலிங்கத்தின் மகன்கள் இருவரும் அவரது உறவினர்களுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் அவர்கள், தங்கள் தந்தை பற்றியும் அவரை எவ்வாறு கொன்றார்கள் என்பது பற்றியும் கூறுகின்றனர். நாங்களும் உங்களைப் போல நடுநிலையாளர்களாகத் தான் இருந்தோம். இப்போது எங்கள் நிலையைப் பாருங்கள் என்று இருவரும் கூறும் போது பலரும் அவர்களது நிலையை நினைத்து மனம் வருந்துகின்றனர்.
தமிழகத்தில் எங்கள் தந்தை கொலை செய்யப்பட்ட போது உடனே ஓடோடி வந்து ஆறுதல் சொன்னவர் ஹெச்.ராஜா. அதுமட்டுமல்லாமல் தேவையான உதவிகளையும் செய்தவர் அவர்தான். எங்களுக்கும் அவருக்கும் இந்து என்பதை தவிர எந்த பந்தமும் இல்லை. ஆனால் தேடி வந்து உதவி செய்தவர், எங்களுக்கு மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர் வருவார்.
அவர் வெற்றிபெற்று வந்தால் மட்டுமே இந்துக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்று கூறுகின்றனர். அவர்கள் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்ட பொதுமக்கள் பலரும் கண்ணீர் சிந்தியதுடன், சொந்த நாட்டில் இந்துக்கள் அகதிகளாக மாறிவிடக் கூடாது என்ற வேதனையை வெளிப்படுத்துவதையும் காணமுடிந்தது.
இது குறித்து ராமலிங்கத்தின் மகன்கள் கூறியவை…
“எங்களுடைய அப்பா என் கண் முன்னரே வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதை திசை திருப்ப திமுகவினரும் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் பலரும் பல வகைகளில் முயற்சி செய்தனர் ஆனால் அவை எதுவும் பலிக்கவில்லை ஆனால் அந்த நேரத்தில் எங்களை முதலில் நேரில் வந்து சந்தித்த நபர் H.ராஜா”.
“அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு அவர் பல உதவிகளை செய்துள்ளார் மேலும் இந்த சம்பவத்தில் திமுகவினர் போன்றோர் எங்களுக்கு எதிரான காரியங்களிலேயே ஈடுபட்டனர்”.
“மேலும் H.ராஜா போன்றோர் மத்திய அமைச்சர் ஆனால் தான் எங்களைப் போன்றவர்களை பாதுகாக்க முடியும் இன்னொரு ராமலிங்கத்தின் குடும்பம் உருவாகும் நிலமை இனி வரக்கூடாது. அதனால் நாங்கள் இந்த முறை பாஜகவை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய களத்தில் இறங்கி முழுமையாக வேலை செய்வோம் எச் ராஜா வை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் வரை ஓயமாட்டோம்” என்றனர்.