December 6, 2025, 5:56 AM
24.9 C
Chennai

சிவகங்கையில் ஹெச்.ராஜாவுக்காக களத்தில் இறங்கிய திருபுவனம் ராமலிங்கம் மகன்கள்!

ramalingam sons - 2025
திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட அமரர் #இராமலிங்கத்தின் மகன்களும் மற்றும் அவரின் உடன் பிறந்த சகோதரர்கள் உறவினர்கள்..,

என் தந்தை கொல்லப்பட்டபோது எந்த உறவும் இல்லாமல் உடனடியாக ஓடோடி வந்தவர் ஹெச்.ராஜா என்று, அவருக்காக தேர்தல் களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்கள் கூறியுள்ளனர்.

ஹெச்.ராஜாவிற்காக களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்களைக் கண்டு, சிவகங்கை மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து அண்மையில் மதவெறியர்களால் கொல்லப்பட்ட திருபுவனம் பாமக நிர்வாகியாக இருந்த ராமலிங்கத்தின் மகன்கள் இருவரும் அவரது உறவினர்களுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் அவர்கள், தங்கள் தந்தை பற்றியும் அவரை எவ்வாறு கொன்றார்கள் என்பது பற்றியும் கூறுகின்றனர். நாங்களும் உங்களைப் போல நடுநிலையாளர்களாகத் தான் இருந்தோம். இப்போது எங்கள் நிலையைப் பாருங்கள் என்று இருவரும் கூறும் போது பலரும் அவர்களது நிலையை நினைத்து மனம் வருந்துகின்றனர்.

தமிழகத்தில் எங்கள் தந்தை கொலை செய்யப்பட்ட போது உடனே ஓடோடி வந்து ஆறுதல் சொன்னவர் ஹெச்.ராஜா. அதுமட்டுமல்லாமல் தேவையான உதவிகளையும் செய்தவர் அவர்தான். எங்களுக்கும் அவருக்கும் இந்து என்பதை தவிர எந்த பந்தமும் இல்லை. ஆனால் தேடி வந்து உதவி செய்தவர், எங்களுக்கு மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர் வருவார்.

அவர் வெற்றிபெற்று வந்தால் மட்டுமே இந்துக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்று  கூறுகின்றனர். அவர்கள் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்ட பொதுமக்கள் பலரும் கண்ணீர் சிந்தியதுடன், சொந்த நாட்டில் இந்துக்கள் அகதிகளாக மாறிவிடக் கூடாது என்ற வேதனையை வெளிப்படுத்துவதையும் காணமுடிந்தது.

இது குறித்து ராமலிங்கத்தின் மகன்கள் கூறியவை…

“எங்களுடைய அப்பா என் கண் முன்னரே வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதை திசை திருப்ப திமுகவினரும் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் பலரும் பல வகைகளில் முயற்சி செய்தனர் ஆனால் அவை எதுவும் பலிக்கவில்லை ஆனால் அந்த நேரத்தில் எங்களை முதலில் நேரில் வந்து சந்தித்த நபர் H.ராஜா”.

“அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு அவர் பல உதவிகளை செய்துள்ளார் மேலும் இந்த சம்பவத்தில் திமுகவினர் போன்றோர் எங்களுக்கு எதிரான காரியங்களிலேயே ஈடுபட்டனர்”.

“மேலும் H.ராஜா போன்றோர் மத்திய அமைச்சர் ஆனால் தான் எங்களைப் போன்றவர்களை பாதுகாக்க முடியும் இன்னொரு ராமலிங்கத்தின் குடும்பம் உருவாகும் நிலமை இனி வரக்கூடாது. அதனால் நாங்கள் இந்த முறை பாஜகவை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய களத்தில் இறங்கி முழுமையாக வேலை செய்வோம் எச் ராஜா வை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் வரை ஓயமாட்டோம்” என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories