சிவகங்கையில் ஹெச்.ராஜாவுக்காக களத்தில் இறங்கிய திருபுவனம் ராமலிங்கம் மகன்கள்!

ramalingam sons - 2026
திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிக் கொல்லப்பட்ட அமரர் #இராமலிங்கத்தின் மகன்களும் மற்றும் அவரின் உடன் பிறந்த சகோதரர்கள் உறவினர்கள்..,

என் தந்தை கொல்லப்பட்டபோது எந்த உறவும் இல்லாமல் உடனடியாக ஓடோடி வந்தவர் ஹெச்.ராஜா என்று, அவருக்காக தேர்தல் களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்கள் கூறியுள்ளனர்.

ஹெச்.ராஜாவிற்காக களத்தில் இறங்கிய ராமலிங்கம் மகன்களைக் கண்டு, சிவகங்கை மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.

சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து அண்மையில் மதவெறியர்களால் கொல்லப்பட்ட திருபுவனம் பாமக நிர்வாகியாக இருந்த ராமலிங்கத்தின் மகன்கள் இருவரும் அவரது உறவினர்களுடன் களத்தில் இறங்கியுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் அவர்கள், தங்கள் தந்தை பற்றியும் அவரை எவ்வாறு கொன்றார்கள் என்பது பற்றியும் கூறுகின்றனர். நாங்களும் உங்களைப் போல நடுநிலையாளர்களாகத் தான் இருந்தோம். இப்போது எங்கள் நிலையைப் பாருங்கள் என்று இருவரும் கூறும் போது பலரும் அவர்களது நிலையை நினைத்து மனம் வருந்துகின்றனர்.

தமிழகத்தில் எங்கள் தந்தை கொலை செய்யப்பட்ட போது உடனே ஓடோடி வந்து ஆறுதல் சொன்னவர் ஹெச்.ராஜா. அதுமட்டுமல்லாமல் தேவையான உதவிகளையும் செய்தவர் அவர்தான். எங்களுக்கும் அவருக்கும் இந்து என்பதை தவிர எந்த பந்தமும் இல்லை. ஆனால் தேடி வந்து உதவி செய்தவர், எங்களுக்கு மட்டுமல்ல யார் பாதிக்கப்பட்டாலும் அவர் வருவார்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

அவர் வெற்றிபெற்று வந்தால் மட்டுமே இந்துக்கள் பாதுகாக்கப் படுவார்கள் என்று  கூறுகின்றனர். அவர்கள் கூறிக் கொண்டிருந்ததைக் கேட்ட பொதுமக்கள் பலரும் கண்ணீர் சிந்தியதுடன், சொந்த நாட்டில் இந்துக்கள் அகதிகளாக மாறிவிடக் கூடாது என்ற வேதனையை வெளிப்படுத்துவதையும் காணமுடிந்தது.

இது குறித்து ராமலிங்கத்தின் மகன்கள் கூறியவை…

“எங்களுடைய அப்பா என் கண் முன்னரே வெட்டிக் கொல்லப்பட்டார்.
அதை திசை திருப்ப திமுகவினரும் இஸ்லாமிய அமைப்பைச் சார்ந்தவர்கள் பலரும் பல வகைகளில் முயற்சி செய்தனர் ஆனால் அவை எதுவும் பலிக்கவில்லை ஆனால் அந்த நேரத்தில் எங்களை முதலில் நேரில் வந்து சந்தித்த நபர் H.ராஜா”.

“அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு அவர் பல உதவிகளை செய்துள்ளார் மேலும் இந்த சம்பவத்தில் திமுகவினர் போன்றோர் எங்களுக்கு எதிரான காரியங்களிலேயே ஈடுபட்டனர்”.

“மேலும் H.ராஜா போன்றோர் மத்திய அமைச்சர் ஆனால் தான் எங்களைப் போன்றவர்களை பாதுகாக்க முடியும் இன்னொரு ராமலிங்கத்தின் குடும்பம் உருவாகும் நிலமை இனி வரக்கூடாது. அதனால் நாங்கள் இந்த முறை பாஜகவை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய களத்தில் இறங்கி முழுமையாக வேலை செய்வோம் எச் ராஜா வை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கும் வரை ஓயமாட்டோம்” என்றனர்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories