வைரல் வீடியோ: ஆய்வாளருக்கு எதிராக பொங்கி எழுந்த காஞ்சிபுரம் ஆட்சியர் குறித்த வைரல் வீடியோ ஒன்று இப்போது பரவலாக விவாதிக்கப் பட்டு வருகிறது.
அத்திவரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பிக்கள் செல்லும் வழியில் காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு எவ்வித பாஸ்-ம் இல்லாமல் அழைத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா திடீரென வி.வி.ஐ.பி நுழைவு வாயிலை ஆய்வு செய்தார். அப்போது பாஸ் இல்லாமல் காவல் ஆய்வாளர் ஒருவர் சிலரை உள்ளே அழைத்துச் செல்ல வழி செய்துள்ளார். அப்போது அவரைப் பிடித்த ஆட்சியர் அவரை கடுமையாக எச்சரித்தார். மேலும் அவரை திட்டித் தீர்த்தார். அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய ஐஜிக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
அவர் பேசிய இந்த வீடீயோ பதிவு இப்போது வைரலாகி வருகிறது.
அத்திவரதர்வைபவம்! ஆய்வாளர் மீது பொங்கிய ஆட்சியர்! லஞ்சம் வாங்கிக் கொண்டு விவிஐபி வழியில் மற்றவர்களை விடுகிறாராம்..! pic.twitter.com/DJzGQhHa8e
— Senkottai Sriram (@SenkottaiSriram) August 10, 2019