ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த வள்ளல் சீதக்காதி சாலையில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்களை அகற்றிய டி.எஸ்.பி மகேஸ்வரி மற்றும் காவல்துறையினரை எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியாஅமைப்பினர் முஜீப், முர்சலி, அஸ்வத் கரீம், பீப் கடை அப்துல் மாலிக் ஆகியோர் ஒன்று திரண்டு அவதூறாகப் பேசி மிரட்டியதுடன், அவர்களை கெரோ செய்தனர். இது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.