இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடப்பது சந்தேகம்?

Published:

புது தில்லி:

இந்த ஆண்டு ஜல்லிகட்டு நடப்பது சந்தேகமே என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஜல்லிகட்டு தொடர்பான தகவலால், அதன் நிர்வாகிகளை தில்லிக்கு அழைத்த பாஜக., நிர்வாகிகள், தற்போது அவர்களிடம் நீங்கள் அனைவரும் ஊருக்குத் திரும்புங்கள். ஏதாவது முன்னேற்றம் இருந்தால் பார்க்கலாம் என கூறிவிட்டனராம். இதை அடுத்து, இந்த வருடம் ஜல்லிக் கட்டு நடப்பது சந்தேகம் என்று அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டு குறித்து பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தீவிரமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் அது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசவே இல்லை என்று தடாலடியாக அறிவித்தார். அது முதலே, ஜல்லிக்கட்டு குறித்த எதிர்பார்ப்பு பொசுங்கிப் போனது.

Related articles

Recent articles

spot_img