பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம்

Published:

பதான்கோட்:

பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் விமானப் படைத்தளத்திற்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையின் முடிவில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 6 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், பதான்கோட் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மதிப்புமிக்க உயிர்கள் பலியானதற்குக் காரணமான இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே செய்தி அந்நாட்டு அரசு வானொலியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img